Monday, September 29, 2014

// // Leave a Comment

உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்க எளிய வழி


உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.

இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார். அவர் கூறிய பரிசோனைகள் அனைத்தும் செய்து, அந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால், உங்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று கூறுவார். நான் உங்களுக்கு மாத்திரை, மருந்து எழுதித்தருகிறேன். ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார். அவர் கொடுக்கும் அதிக விலையுள்ள மாத்திரைகளையும், மருந்துகளையும் விலை கொடுத்து வாங்கி, அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து, ஆறுமாதம் சாப்பிட்டாலும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ளதே தவிர, மறுபடியும் பழைய நிலையில் பாதிகூட சரியாகவில்லை.
நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை. உடல் களைப்பு அடைகிறது. பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது.

உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது.

ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ûஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.

உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள். காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

நாட்கள் காலை 6 மணி மதியம் 12 மணி மாலை 6 மணி மொத்தம் பழங்கள்

1வது நாள் 1 1 1 = 3
2வது நாள் 2 2 2 = 6
3வது நாள் 3 3 3 = 9
4வது நாள் 4 4 4 = 12
5வது நாள் 4 4 4 = 12
6வது நாள் 4 4 4 = 12
7வது நாள் 3 3 3 = 9
8வது நாள் 2 2 2 = 6
9வது நாள் 1 1 1 = 3

ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப் பாருங்கள். தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளாபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளாபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும். உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். இப்படி செய்து அருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர், ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும். செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் இழந்த சக்தியையும், உற்சாகத்தையும் நாம் பெறலாம்.
Read More
// // Leave a Comment

ஹீமோகுளோபின் உடலில் அதிகரிக்க


உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். 

ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள். காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள்.

இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

ஒன்பது  நாட்கள் காலை 6 மணி மதியம் 12 மணி மாலை 6 மணி
மொத்தம் பழங்கள் 72

1வது நாள் 1 +1+ 1= 3 பழங்கள்.
2வது நாள் 2 +2 +2= 6 பழங்கள்.
3வது நாள் 3+ 3 +3 =9பழங்கள்.
4வது நாள் 4+ 4 +4 =12 பழங்கள்.
5வது நாள் 4+ 4+ 4= 12 பழங்கள்.
6வது நாள் 4+ 4+ 4= 12 பழங்கள்.
7வது நாள் 3+ 3+ 3= 9 பழங்கள்.
8வது நாள் 2+ 2+ 2= 6 பழங்கள்
9வது நாள் 1+ 1+ 1= 3 பழங்கள்

ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப் பாருங்கள்.

தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள்.

இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளாபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும்.

 இந்த ஹீமோகுளாபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும். உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். இப்படி செய்து அருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர், ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும்.

செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் இழந்த சக்தியையும், உற்சாகத்தையும் நாம் பெறலாம்.
Read More
// // Leave a Comment

40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்

அகத்தி கீரை

ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும்.


காசினிக் கீரை

சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.


சிறு பசலைக் கீரை

சரும நோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குறைக்கும்.


பசலைக் கீரை

தசைகளை பல மடையச் செய்யும்.


கொடி பசலைக் கீரை

வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.


மஞ்சள் கரிசலை

கல்லீரலை பல மாக்கும். காமாலையை விலக்கும்.


குப்பை கீரை

பசியைத் தூண்டும். வீக்கம் வத்தவைக்கும்.


அரைக்கீரை

ஆண்மை பெருக்கும்.


புளியங்கீரை

சோகையை விலக்கும். கண் நோய் சரியாக்கும்.


பிண்ணாக்கு கீரை

வெட்டையை, நீர் கடுப்பை நீக்கும்.


பரட்டைக் கீரை

பித்தம், கபம், நோய்களை விலக்கும்.


பொன்னாங்கன்னி கீரை

மேனி அழகையும், கண் ஒளியை அதிகரிக்கும்.


சுக்கா கீரை

ரத்த அழுத்தத்தை சீர் செய்யும். சிரங்கு மூலத்தை போக்கும்.


வெள்ளை கரிசலைக்கீரை

ரத்த சோகையை நீக்கும்.


முருங்கைக் கீரை

நீரிழிவை நீக்கும். கண்கள் உடல் பலம் பெறும்.


வல்லாரை

மூளைக்கு பலம் தரும்.


முடக்கத்தான் கீரை

கை, கால் முடக்கம் நீக்கும். வாயு விலகும்.


புண்ணக் கீரை

சிரங்கும், சீதளமும் விலக்கும்.


புதினாக் கீரை

ரத்தம் சுத்தி செய்யும். அஜீரணம் அகற்றும்.


நஞ்சு முண்டான் கீரை

விஷம் முறிக்கும்.
தும்பை

அசதி, சோம்பல் நீக்கும்.


கல்யாண முருங்கை கீரை

சளி, இருமலை துளைத்தெறியும்.


முள்ளங்கி கீரை

நீரடைப்பு நீக்கும்.


பருப்பு கீரை

பித்தம் விலக்கும். உடல் சூட்டை தணிக்கும்.


புளிச்ச கீரை

கல்லீரலை பலமாக்கும். மாலைக்கண் நோயை விலக்கும். ஆண்மை பலம் தரும்.


மணலிக்கீரை

வாதத்தை விலக்கும். கபத்தை கரைக்கும்.


மணத்தக்காளி கீரை

வாய், வயிற்றுப்புண் குணமாக்கும். தேமல் அகலும்.


முளைக் கீரை

பசியை ஏற்படுத்தும். நரம்பு பலமடையும்.


சக்கரவர்த்தி கீரை

தாது விருத்தியாகும்.


வெந்தயக் கீரை

மலச்சிக்கலை நீக்கும். மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.


தூதுவளை

ஆண்மை தரும் சரும நோய் விலக்கும். சளி நீக்கும்.


தவசிக் கீரை

இருமலை போக்கும்.


சாணக் கீரை

காயம் ஆற்றும்.


வெள்ளைக் கீரை

தாய்ப்பாலை பெருக்கும்.


விழுதிக் கீரை

பசியைத் தூண்டும்.


கொடி காசினி

பித்தம் தணிக்கும்.


துயிளிக் கீரை

வெள்ளை வெட்டை விலக்கும்.


துத்திக் கீரை

வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.


கார கொட்டிக்கீரை

மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.


மூக்கு தட்டை கீரை

சளியை அகற்றும்.


நருதாளி கீரை

ஆண்மையை பெருக்கும். வாய்ப்புண் அகற்றும்.

Read More
// // Leave a Comment

மூட்டு வலி

மூட்டு வலிக்கான காரணங்களும், சித்த மருத்துவ சிகிச்சையும்

குழந்தைகளை பாதிக்கும் மூட்டு வலி

ஜுரம், அடிபடுதல், காசநோய், அம்மை நோய் போன்ற நோய்கள் வந்த குழந்தைகளுக்கு இந்த மூட்டு வியாதி வரலாம். 16 வயதுக்கு குறைந்தவர்களை இவ்வியாதி தாக்குகிறது. ஒரு மூட்டு அல்லது பல மூட்டுகள் பாதிப்படையலாம்.

ஆரம்ப அறிகுறியாக குழந்தைகள் இரவு நேரத்தில் மூட்டு வலி ஏற்பட்டு கத்துவார்கள். நடக்க சிரமப்படுவார்கள். இந்த வியாதியை சரியான முறையில் கண்டறிந்து குணப்படுத்தா விட்டால் மூட்டுகள் அழிந்து அதன் வலுவையும், செயலையும் இழக்க கூடும். எனவே நோயை சரியான முறையில் நிர்ணயம் செய்து மருத்துவம் புரிய வேண்டும்.


ருமாட்டாய்டு ஆர்த்ரைட்டீஸ்

இந்த வாதம் 20 முதல் 50 வயது உள்ளவர்களுக்கு வரக்கூடியதாகும். இதில் ஆண்களை விட பெண்களே பாதிக்கப்படுகிறார்கள். இதன் அறிகுறிகளாக அதிகாலை நேரங்களில் ஒரு மணி நேரத்துக்கு மூட்டுகளில் ஏற்படும் இறுக்கம் 6 மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக காணப்படும்.

முதலில் கை, கால்களில், விரல் மூட்டுகளில் ஆரம்பித்து அதற்கு மேற்பட்ட மூட்டுகளை பாதிப்படைய செய்கின்றன. ரத்தத்தில் ஆர்ஏஎப் சோதனை மூலம் நோய் நிர்ணயமாகி இருப்பதை அறிந்து கொள்ளலாம். பொதுவாக இது பரம்பரையாகவும், அடிபடுவதாலும், மன உளைச்சலாலும் கூட வரலாம்.

மூட்டுகளை தவிர நுரையீரல், இருதயம், கண்கள் இவற்றிலும் பாதிப்பு உண்டாக கூடும். இவ்வாதத்தில் முக்கிய அறிகுறியாக மூட்டுகளில் சிறு, சிறு கட்டிகள் உண்டாகி மூட்டுகளின் அசைவற்ற தன்மைக்கு ஒரு காரணமாகிறது.

மூட்டுகளின் அமைப்பு மாறி வாத்து கழுத்து போல் ஆகும். கட்டை விரல் `இசட்' வடிவில் ஆகும். இது ஒரு கொடிய வியாதி. இதற்கு முறையான மருந்துகள் நீண்டநாள் எடுக்க வேண்டும். அப்போது தான் கட்டுப்படுத்த முடியும்.


பெரியவர்களை பாதிக்கும் மூட்டு வலி

பெரியவர்களை பாதிக்கின்ற மூட்டு வலியை தேய்வு வாதம் என்றும் ஆஸ்டியோ ஆர்த்ரைட்டீஸ் என்று அழைக்கிறோம். பொதுவாக 55 முதல் 70 வயதுள்ளவர்களை பாதிக்க கூடிய இந்நோய் தற்போது 35 வயதுக்கு முன்பிருந்தே காணப்படுகிறது.

இந்த வாதம் அடிபட்டதினால், எலும்பு முறிவினால், ஹார்மோன் கோளாறுகளினால், அதிக நடையால், அதிக எடையால் வரக்கூடும். சில பெண்கள் மாதவிடாய் நிற்கும் காலத்திலும் பாதிக்கப்படுகிறார்கள்.

மூட்டுப்பகுதி வெளிப்புறமாக வளைந்து நடக்க முடியாமல் வலியால் துடிப்பது நோயின் முற்றிய நிலை ஆகும். பரிசோதனைகளால் நோய் நிர்ணயிக்கப்பட்டு தகுந்த ஓய்வுடன் கூடிய மருந்துகள் கொடுத்து இந்த வியாதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும். இளவயதினர் பூரணமாக சுகம் பெறுவர்.


சோரியாட்டிக் ஆர்த் ரைடிஸ்

காளாஞ்சக படை என்ற தோலில் உண்டாகும் செதில் உதிர்வு நோய் வந்தவர்கள் முறையான சிகிச்சை பெறாமல், பராமரிக்காமல் இருந்தால் கை, கால் மூட்டுகளில் வலி, வீக்கம் ஏற்பட்டு அசைக்க முடியாமலும், எலும்பு தோற்றத்தில் நெளிந்தும் குறுகியும், விகாரமாக தோன்றும். நகக்கண் நிறம் மாறியும், சதை துருத்தியும் காணப்படும்.

சோரியாஸ் வந்தவர்கள் அதற்கு முறையான சிகிச்சை செய்யாத போது இந்த கொடிய வியாதியின் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். ஆகவே இதற்கு ஒருங்கிணைந்த சிகிச்சை மூலம் நல்ல சுகம் பெற முடியும்.


முடக்குவாதம்

மூட்டு எலும்புகளின் உள்ளேயும், வெளியேயும் யூரிக் அமிலத்தின் படிமங்கள் படிவதின் காரணமாக முடக்குவாதம் ஏற்படுகிறது. தொடக்க நிலையில் இந்த வியாதி இரவு நேரங்களில் கால் பெருவிரல் வீக்கம் உண்டாகி சிவந்த பளப்பள தோற்றத்துடன் கடுமையான வலிகளுடன் ஏற்படுகிறது.

நாளடைவில் பிற மூட்டுக்களையும் பற்றி மூட்டுகள் செயல் இழந்த நிலையை ஏற்படுத்துகிறது. பொதுவாக இந்த வியாதி பியூரன்களால் இப்படி ஆகிறது. மனித உடலில் சராசரியாக 70 சதவீதம் யூரிக் அமிலம் சிறுநீர் மூலம் வெளியேறுகிறது.

இந்த அளவு குறைகின்றபோது இவ்வியாதி வர வாய்ப்பாகிறது. இவ்வியாதி பெண்களை விட ஆண் களுக்கே அதிகமாக காணப்படுகிறது. எனவே மூத்திர நாளங்கள் சரியாக பராமரிக்கப்பட வேண்டும், யூரிக் அமிலம் உடலில் தங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.


எளிய வழிமுறைகள்

மூட்டு வலிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள எளிய வழிமுறைகள்

1. இயற்கை உணவு முறை பழக்கவழக்கத்தை கடைபிடிப்பது நல்லது.

2. அதிக புளி, காரம், குளிர்பானங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

3. அஜீரண கோளாறு மற்றும் மலச்சிக்கல் வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.

4. மதுபானம், மாது, மாமிசத்தை முடிந்தவரை குறைப்பது நல்லது.

5. வாழைக்காய், உருளைக்கிழங்கு, முட்டை போன்ற வாயுவை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

6. குடிப்பதற்கு கொதிக்க வைத்த தண்ணீரையும், குளிப்பதற்கு வெது வெதுப்பான நீரையும் பயன்படுத்த வேண்டும்.

7. தியானம், மூச்சுப் பயிற்சி போன்ற எளிய உடற்பயிற்சிகளை தினமும் செய்ய வேண்டும்.

8. நோயின் தன்மை அதிகமாய் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை கலந்து ஆலோசித்து மருத்துவம் செய்யவேண்டும்.
Read More
// // Leave a Comment

குடல் பிரச்சனைகளைத் தீர்க்கும் மணத்தக்காளி கீரை


அன்றாடம் உணவோடு சேர்த்துக்கொள்ளக்கூடிய கீரை வகைகளில் மணத்தக்காளிக்கு சிறப்பான இடம் உண்டு. மணத்தக்காளி கீரையை பருப்புடன் சேர்த்துக் கூட்டு வைக்கலாம். பொரியலாகச் செய்து சாப்பிடலாம். சாம்பார் செய்யும் போது அதில் மணத்தக்காளி கீரையை போட்டால் சாம்பார் ருசியாக இருக்கும். குடல் புண்ணைக் குணப்படுத்துவதில் மணத்தக்காளி நிகரற்ற மூலிகையாகப் பயன்படுகிறது.

வயிற்றிலும், வாயிலும் தோன்றும் புண்களை உடனடியாக சிகிச்சை செய்து குணப்படுத்திக் கொள்ளாவிட்டால் பல வீபரீதமான விளைவுகள் ஏற்படக்கூடும். மிக மோசமான நிலையை அடைந்து விட்ட குடற்புண்ணைக்கூட தொடர்ந்து மணத்தக்காளிக் கீரையை சாப்பிட்டு வருவதன் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தி விடலாம். குடற்புண், வாய் புண் அதிகமாக இருந்தால் மணத்தக்காளி கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு போல வைத்து சாப்பிடவேண்டும்.

தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல குணம் பெறலாம். உடலில் தோன்றும் கரப்பான் வகை பிணிகளுக்கும் மணத்தக்காளி நல்ல விதத்தில் பன்படுகிறது. நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. கல்லீரல் நோயை குணப்படுத்தி ரத்தத்திற்கு தேவையான சிவப்பணுக்களை உருவாக்குகிறது. உடல் சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளியை சமைத்து சாப்பிட்டால் உடல் சூட்டை தணிந்து குளிர்ச்சியாக்கும். இந்தக்கீரையில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி மற்றும் பி, வைட்டமின், தாதுக்கள் போன்றவை அதிக அளவில் உள்ளது.

மணத்தக்காளி கீரை குடல் பிரச்சனைகளை சரிபடுத்துவதோடு மட்டுமல்லாமல், அஜீரணம், வயிறு சம்பந்தமான பிரச்சனைகள், ஆகியவற்றையும் சரிசெய்கிறது. மணத்தக்காளி கீரையின் சாறு காய்ச்சல், காய்ச்சலால் ஏற்படும் கை கால் வலிகளையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மணத்தக்காளியை அழகுக்காக பயன்படுத்துகின்றனர். சர்க்கரை நோய் உள்ளவர்கள் மணத்தக்காளியை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயிலிருந்து குணம் பெறலாம்.

வடஇந்தியாவில் மஞ்சள் காமாலை, கல்லீரல் தொடர்பான வியாதிகளை குணப்படுத்த மணத்தக்காளியின் பழம் மற்றும் கீரைகளை வேகவைத்து அதன் சாற்றை பருகுகின்றனர். தோலில் ஏற்படும் அலர்ஜி வெயிலுக்கு ஏற்படும் கட்டிகள், தோல் அரிப்பு போன்றவற்றை சரிபடுத்த கீரையை சாறாக பிழிந்து அதன்மேல் தேய்க்க வேண்டும். காபி தயாரிக்கும் போது கீரையின் தண்டு, இலை சேர்த்து காபி தயாரித்து குடிக்கலாம். ஏனெனில் காயங்கள், புற்றுநோய் புண்களை ஆற்றும் வல்லமை கொண்டது மணத்தக்காளி கீரை.
Read More

Friday, September 26, 2014

// // Leave a Comment

தொண்டையில் ஏற்படும் புண்களை குணப்படுத்த 15 வகையான இயற்கையான ஜூஸ்கள்


காலநிலை மாற்றத்தினால், இருமல் மற்றும் தொண்டைப் புண்ணால் அவஸ்தைப்படக்கூடும். அதுமட்டுமின்றி இவைகள் அளவுக்கு அதிகமாகும் போது, காய்ச்சல் வர ஆரம்பிக்கும். ஆகவே அப்படி அவஸ்தைப்படும் போது, ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்வதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டால், நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருப்பதைத் தடுக்கலாம்.

ஒருவேளை அப்படி சிகிச்சை எடுக்காமல், லேசாக கரகரவென்று தான் உள்ளது என்று சாதாரணமாக நினைத்தால், பின் தொண்டையானது அளவுக்கு அதிகமாக புண்ணாகிவிடும். எனவே தமிழ் போல்ட் ஸ்கை, இருமல், தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டைப் புண்ணை சரிசெய்யும் ஒருசில அருமையான ஜூஸ்களைக் கொடுத்துள்ளோம். இந்த ஜூஸ்கள் அனைத்தும் நிச்சயம் தொண்டைப் புண்ணை குணமாக்கும் தன்மை கொண்டவை. மேலும் நிபுணர்கள் கூட இந்த ஜூஸ்களை குடிக்குமாறு பரிந்துரைத்துள்ளனர். எனவே இருமல் மற்றும் தொண்டைப் புண்ணால் காய்ச்சல் வருவதற்குள், அவைகளை சரிசெய்ய கீழ்க்கூறிய ஜூஸ்களை முயற்சி செய்து பாருங்கள். அதிலும் இதனை தொடர்ந்து குடித்து வந்தால், மூன்றே நாட்களில் தொண்டைப் புண்ணில் இருந்து விடுபடலாம்.


தொண்டைப் புண்ணை சரிசெய்யும் ஜூஸ்கள்


1) எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ் போட்ட குடிக்கும் போது, வெதுவெதுப்பான நீரில் தேன் சேர்த்து குடிக்க வேண்டும். இதனால் தொண்டையில் உள்ள கிருமிகள் அழிவதோடு, புண்ணும் குணமாகும்.


2) இஞ்சி ஜூஸ்

இஞ்சியில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை இருப்பதால், இது எந்த வகையான கிருமியானாலும் எளிதில் அழித்துவிடும். எனவே தொண்டை கரகரவென இருக்கும் போதே, சிறிது இஞ்சி ஜூஸ் குடித்துவிடுங்கள்.


3) கேரட் ஜூஸ்

கேரட்டில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது தொண்டையில் எவ்வித தொற்றுகள் இருந்தாலும் குணப்படுத்திவிடும். அதலும் இதனை தினமும் ஒரு கப் குடித்து வந்தால், தொண்டைப் புண்ணின் தொல்லையில் இருந்து குணமாகலாம்.


4) பூண்டு ஜூஸ்

இஞ்சியைப் போன்றே பூண்டிலும் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. எனவே தொண்டைப் புண் இருக்கும் போது 4 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான பூண்டு ஜூஸ் குடித்தால், உடனே குணமாகிவிடும்.


5) குருதிநெல்லி ஜூஸ் [ Cranberry Juice ]

தொண்டைப் புண்ணை சரிசெய்யும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் குருதிநெல்லி. ஆகவே தொண்டைப் புண் இருக்கும் போது குருதிநெல்லியை ஜூஸ் போட்டு குடியுங்கள்.


6) ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், இதனை ஜூஸ் போட்டு குடித்தால், தொண்டைப் புண் மற்றும் வலி குணமாகும்.


7) கற்றாழை ஜூஸ்

கற்றாழை ஒரு சிறப்பான மூலிகைப் பொருள். இந்த கற்றாழையை சாறு எடுத்து, அதில் சிறிது கிராம்பு பொடி சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப் புண் விரைவில் குணமாகும்.


8) தக்காளி ஜூஸ்

தினமும் இரண்டு முறை தக்காளி ஜூஸில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.


9) புதினா ஜூஸ்

இஞ்சி, பூண்டு போன்றே புதினாவிலும் ஆன்டி-பாக்டீரியல் பொருள் உள்ளது. அதற்கு இதனை சாறு எடுத்து, அதில் சிறிது தயிர் சேர்த்து குடிக்க வேண்டும்.


10) அன்னாசிப் பழ ஜூஸ்

அன்னாசி பழத்தில் உள்ள ப்ரோமெலைன் என்னும் நொதி உள்ளது. மேலும் இதில் நோயெதிர்ப்பு அழற்சி பொருள் அதிகம் இருப்பதால், இது தொண்டையில் ஏற்படும் எரிச்சல், அரிப்பு ஆகியவற்றை குணமாக்கும்.


11) கிவி ஜூஸ்

கிவி பழத்தை ஜூஸ் போட்டு குடித்தால் கூட தொண்டைப் புண்ணுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும் இதில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், இது வறட்சி இருமலில் இருந்து பாதுகாக்கும்.


12) வாழைப்பழ ஜூஸ்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இதனை ஜூஸ் போட்டு குடித்தால், தொண்டைப் புண்ணை சரிசெய்யலாம். மேலும் வாழைப்பழத்தை சாப்பிட்டால், சளி மற்றும் இருமலில் இருந்து விலகி இருக்கலாம்.


13) தர்பூசணி ஜூஸ்

தர்பூசணியை வெதுவெதுப்பான நீரில் ஜூஸ் போட்டு குடித்தால், தொண்டைப் புண்ணினால் ஏற்படும் எரிச்சலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.


14) ஆப்ரிக்காட் ஜூஸ்

தொண்டைப் புண்ணினால் அவஸ்தைப்படும் போது, ஆப்ரிக்காட் ஜூஸ் போட்டு குடிப்பது நல்லது.


15) மிளகு கசாயம்

மிளகை வாணலியில் போட்டு நன்கு வறுத்து, பின் அதில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட்டு, அந்த நீரை சூடாக குடித்தால், தொண்டையில் உள்ள கிருமிகள் அழிக்கப்பட்டு, தொண்டைப் புண் உடனே குணமாகும்.
Read More
// // Leave a Comment

கால் ஆணி


பித்தவெடிப்பிற்கு அடுத்தபடியாக பாதங்களைத் தாக்குவதில் இடம் வகிப்பது கால் ஆணி எனலாம். இது பாதத்தைத் தரையில் வைக்க முடியாத அளவிற்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.

பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல உண்டாகி நடக்கும் போது வலியைத் தருவதுதான் கால் ஆணி ஆகும். இது அதிகமான உடல் அழுத்தம் காரணமாகவும், அளவு குறைந்த காலணிகளை அணிவதாலும் முள் போன்ற அன்னியப் பொருட்கள் கால்களில் குத்தி தங்கிவிடுவதாலும் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தைத் தருகிறது.

கால் ஆணி உள்ளவர்களின் காலணிகளை பயன்படுதுவதாலும் கால் ஆணி ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. காலுக்குப் பொருந்தாத சிறிய அளவு செருப்புகளைப் பயன்படுத்துவதாலும், வெறும் காலில் நடப்பதாலும் கூட கால் ஆணி ஏற்படும்.

இந்தக் கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் பின்னாளில் நடப்பதற்கே பெரும் சிரமமாகிவிடும்.


கால் ஆணிக்கு இயற்கை மருத்துவத்தின் மூலம் சிகிச்சை அளிக்கலாம்.

(1) வெள்ளை எருக்கின் இலைகளை அரைத்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் பத்து போடலாம்.

(2) கால் ஆணி ஏற்பட்ட ஆரம்ப நிலையிலேயே பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரலாம்.

(3) அம்மான் பச்சரிசி செடியின் பாலை எடுத்து, கால் ஆணி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் வெகு விரைவில் குணமாகும்.

(4) சிறிதளவு மருதாணி இலை மற்றும் மஞ்சள் துண்டு இரண்டையும் மையாக அரைத்து, ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து, இரவு தூங்குவதிற்கு முன் கால் ஆணி உள்ள இடத்தில் வைத்து கட்டிவிட வேண்டும். தொடர்ந்து 10 நாள் செய்தால் குணமாகிவிடும்.

(5) இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டு காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணி நிவாரணம் கிடைக்கும்.

(6) மேலும், மல்லிகைச் செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பற்று போடலாம். பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாமலும், இருந்த இடம் தெரியாமலும் போகும்.

(7) மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள் மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும்.
Read More
// // Leave a Comment

கால் ஆணி

கால் ஆணி என்றால் என்ன?

சாதாரணமாக கைகளிலும், கால் விரல்களிலும் தோல் காய்த்துப் போய் இறுகி கெட்டியாவது தான். பொதுவாக 'ஆணி' எனப்படுகிறது. கால் கட்டைவிரலின் அடியிலும், விரல்களின் நடுவிலும் ஏற்படும் போது Corn  என்றும் உள்ளங்கால்களில் (Soles of feet)  தோன்றும் போது Calluses  எனப்படும். ஒரே இடத்தில் தொடர்ந்த உராய்வு (Constant friction) இருக்கும் போதும், குறிப்பிட்ட பகுதியில் அளவுக்கு மீறிய அழுத்தம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும் போதும் இவ்வகைக் காய்ப்புகளும், ஆணிகளும் தோன்றுகின்றன. வலி எதையும் ஏற்படுத்தாத வரையில் இவை பற்றி யாரும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை.

 தொழில் நிமித்தம் தங்கள் கைகள், கால்கள் மற்றும் விரல்களைத் தொடர்ந்து உராய்வுக்கு உட்படுத்துகின்ற மண் வெட்டுவோர், லாரி மற்றும் பேருந்து ஒட்டுனர்கள், தையற்காரர்கள், சிற்பிகள் போன்றவர்களுக்கு இவ்வகை காய்ப்புகள் எளிதாக ஏற்படக் கூடும்.


காரணங்கள்

ஆணிகளை உண்டாக்கும் சர்ம தடிப்பு, ஒரு வித தற்காப்பு நடவடிக்கை தான். எப்போதும் ஒன்றோடொன்று உராய்ந்து கொண்டு, அதிக அழுத்தம் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் போது, அந்த இடங்களில் ஏற்படும் காய்ப்பு தோலை பாதுகாக்கத் தான். நாம் பாதங்களை சரிவர பராமரிப்பதில்லை. ஆணி, வலி இந்த மாதிரி பிரச்சனைகள் வரும் போது தான் கால்களை கவனிக்கிறோம்.

அளவில் சரியில்லாத, பொருத்தமில்லாத, இறுக்கமான காலணிகள் அணிவது முக்கிய காரணம். இறுக்கமான காலுறைகள் (Socks) அணிவதும் காரணமாகலாம். தரம் குறைந்த பிளாஸ்டிக் செருப்புகளும் காரணமாகலாம்.

உருக்குலைந்த கட்டை விரல்கள், நடக்கும் பாணி

கெட்டியான தரை / பாதையில் அதிக நேரம் நிற்பது, நடப்பது

தொழில் ரீதியாக, ஒரே இடத்தில் அழுத்தம் ஏற்படுவது


உதாரணம்

 முன்பு சொன்ன தொழில்கள் செய்பவர்கள். பொதுவாக காய்ப்புகளால் பெரிதும் வேதனை ஏற்படுவதில்லை. பல சமயங்களில் காய்ப்புகள் தானாகவே மறையலாம்.


வீட்டு வைத்தியம்

ஆணிகளை "கரைக்க" தினமும் பாதிக்கப்பட்ட இடத்தில் விளக்கெண்ணை அல்லது தேங்காய் எண்ணையை, தினமும் 3 அல்லது 4 தினங்கள் தடவவும் இதனால் கெட்டிபட்டுப் போன தோல் மிருதுவாகும்.

மஞ்சள் பொடியை தேன் அல்லது விளக்கெண்ணையில் சேர்த்து ஆணிகளின் மேல் தடவலாம்.

பப்பாளி சாற்றை ஆணிகளின் மேல் தடவலாம்.

சிறு துணித்துண்டை வினிகரில் (புளிக்காடி - Vinegar) தோய்த்து ஆணி மேல் வைத்து கட்டவும். ஒன்றரை நாள் கழித்து ஆணி தானாகவே உதிர்ந்துவிடும்.


இதர குறிப்புகள்

காலின் விரல்களை அழுத்தும் முன்பாகம் குறுகலான காலணிகளை அணியாதீர்கள். புது காலணிகளை வாங்கும் போது உங்கள் காலின் அளவுகளை சரியாக அளக்க, நின்று கொண்டு எடுத்துக் கொள்ள வேண்டும். பகல் வேளைகளில் காலணிகளை வாங்கவும். பகலில் கால்கள் சிறிது "வீங்கி" இருக்கும்.

ஆயுர்வேத மருந்தான காசி சாதி தைலம் பயனளிக்கும்.
Read More

Thursday, September 25, 2014

// // Leave a Comment

கொய்யாப்பழம்


கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

மழைக்காலத்தில் கிடைக்கும் மிகவும் விலை மலிவான பழங்களுள் ஒன்று தான் கொய்யாப்பழம். இந்த கொய்யாப்பழமானது பல்வேறு நன்மைகள் உள்ளடக்கியுள்ளது. அதிலும் நான்கு ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மையானது ஒரே ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் . ஒரே ஒரு கொய்யாப்பழத்தில் உடலுக்கு வேண்டிய பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளது.

எனவே அத்தகைய கொய்யாப்பழத்தை தவறாமல் தினமும் வாங்கி சாப்பிடுங்கள். மேலும் மழைக்காலத்தில் எளிதில் நோய்த்தொற்றுகள் ஏற்படும் என்பதால், கொய்யாப்பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து, நோய்களின் தாக்கத்தைக் குறைக்கலாம்.

அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடிய கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.



சத்துக்கள்

கொய்யாப்பழத்தில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் அடங்கியுள்ளன. அதுமட்டுமின்றி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.


நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி வளமாக நிறைந்துள்ளதால், இதனை தினமும் உட்கொண்டால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, எவ்வித நோய் தாக்கமும் ஏற்படாதவாறு தடுக்கலாம்.


மலச்சிக்கலைப் போக்கும்

மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், கொய்யாப்பழத்தை உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடலாம்.


பற்கள் வலுவடையும்

கொய்யாப்பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட, அதன் அப்படியே கடித்து சாப்பிட்டால், பற்களும் ஈறுகளும் வலுவடையும்.


செரிமான மண்டலம் பலமடையும்

கொய்யாப்பழமானது செரிமான மண்டல உறுப்புகளைப் பலப்படுத்தும் ஆற்றல் பெற்றது. இதை உண்பதால் வயிறு, குடல் இரைப்பை, கல்லீரல் மண்ணீரல், போன்றவை வலுப்பெறும். மேலும் இது மலக்கிருமிகளை கொல்லும் சக்தி கொண்டது.


இரத்த சோகை

இரத்த சோகை உள்ளவர்கள் கொய்யாப்பழத்தை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், இரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.


போதையை மறக்கடிக்கும்

மது போதைக்கு அடிமையானவர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால், கொய்யாப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். இதனால் மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.


புற்றுநோயை தடுக்கும்

கொய்யாப்பழத்தில் லைகோபைன் மற்றும் கரோட்டினாய்டுகள் அதிகம் உள்ளன. இவை புற்றுநோய் கட்டிகள் ஏற்படுவதை தடுக்கும் குணம் கொண்டவை.


இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள பொட்டாசியம் மிகவும் அவசியமானது. இத்தகைய பொட்டாசியம் கொய்யாப்பழத்தில் உள்ளது. எனவே இதனை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.


நீரிழிவு

கொய்யாப்பழத்தில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், இதனை நீரிழிவு நோயாளிகள் உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.


இருமல் மற்றும் தொண்டைப்புண்

மழைக்காலத்தில் பலருக்கு இருமல் மற்றும் தொண்டைப்புண் வரக்கூடும். அத்தகையவர்கள் கொய்யா மரத்தின் இளம் கிளைகளை நீரில் போட்டு காய்ச்சி, அந்நீரினால் வாயை கொப்பளித்தால், அவை விரைவில் குணமாகும்.


ஆரோக்கியமான கண்கள்

கொய்யாப்பழத்தில் வைட்டமின் ஏ இருப்பதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால், கண்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.


முதுமையைத் தடுக்கும்

கொய்யாப்பழத்தின் தோலில் தான் அதிக சத்துக்கள் உள்ளன. எனவே இதன் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. இப்படி தோல் நீக்காமல் சாப்பிட்டால், அவை முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருவதோடு, தோல் வறட்சியை நீக்கும். அதுமட்டுமின்றி முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராகவும் மாற்றும்.


ஈறுகளில் வீக்கம்

ஈறுகளில் வீக்கம் அல்லது வலி இருந்தால், கொய்யா மரத்தின் இலைகளை நீரில் போட்டு காய்ச்சி வாயை கொப்பளித்தால், வலி மற்றும் வீக்கம் குறையும்.


குறிப்பு

  1. கொய்யாப்பழத்தில் இரவில் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், அது வயிற்று வலியை உண்டாக்கும். 
  2. கொய்யாப்பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். அப்படி சாப்பிட்டால், பித்தம் அதிகரித்து, வாந்தி மயக்கம் ஏற்படக்கூடும். எனவே ஒரு நாளைக்கு 2 கொய்யாப்பழம் போதுமானது. 
  3. வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.

Read More
// // Leave a Comment

நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய சிறுநீரக நோயின் 12 அறிகுறிகள்


சிறுநீரக நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுப்பிடிப்பது மிகவும் முக்கியமாகும். அப்படி இல்லையென்றால் சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்வது இயலாமல் போய்விடும். தீவிரமான சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்க, ஒருசில அறிகுறிகள் தெரிந்தாலே உங்கள் மருத்துவரை அணுகுங்கள். சீக்கிரமே கண்டுப்பிடித்தால் சிறுநீரக நோய்களுக்கு சிறப்பான சிகிச்சையை அளித்திடலாம்.


சிறுநீரக செயல்பாட்டில் மாற்றங்கள்

சிறுநீரக நோயின் முதல் அறிகுறியே சிறுநீர் வெளியேறும் அளவிலும், அதனை எத்தனை முறை கழிக்கிறோம் என்ற வீதத்திலும் ஏற்படும் மாற்றம். சிறுநீர் அளவு கூடுதலாக அல்லது குறைவாக இருக்கலாம். அதே போல் சிறுநீர் கழிக்கும் எண்ணிக்கை வீதமும் கூடுதலாக அல்லது குறைவாக இருக்கலாம். அதுவும் முக்கியமாக இரவு நேரத்தில் தான் இந்த மாற்றங்களை உணரலாம்.அதில் சிறுநீரின் நிறமும் அடர்ந்த நிறத்தில் இருக்கலாம் அல்லது அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என தோன்றும், ஆனால் எதுவுமே வராது.


சிறுநீர் கழிக்கும் போது கஷ்டப்படுவது அல்லது வலி எடுப்பது

சில நேரம் சிறுநீர் கழிக்கையில் கஷ்டப்படலாம் அல்லது அழுத்தத்தை உணரலாம் அல்லது வலி ஏற்படலாம். சிறுநீரக பாதையில் தொற்றுக்கள் ஏற்பட்டால் சிறுநீர் கழிக்கையில் வலி அல்லது எரிச்சல் தன்மை உண்டாகும். இந்த தொற்றுக்கள் சிறுநீரகங்களுக்கு பரவினால் காய்ச்சல் உண்டாகி, பின்பக்கம் வலியும் எடுக்கும்.


சிறுநீரில் இரத்தம்

இது சிறுநீரக நோயின் அறிகுறியாகும். கண்டிப்பான முறையில் இது சிறுநீரக நோயையே குறித்தாலும் கூட, சில நேரத்தில் வேறு காரணமும் கூட இருக்கலாம். அதனால் அப்படி ஏதேனும் ஏற்பட்டால் உங்கள் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது.


வீக்கம்

உடலில் உள்ள கழிவுகள் மற்றும் கூடுதல் நீர்மத்தை அகற்றுவதே சிறுநீரகத்தின் வேலை. அதனை அவையால் செய்ய முடியவில்லை என்றால், இந்த கூடுதல் நீர்மம் குவிந்து கொண்டே சென்று, அதனால் கைகள், கால்கள், முகம் போன்ற இடங்களில் வீக்கம் ஏற்படும்.


தீவிரமான சோர்வு மற்றும் பொதுவான அயர்ச்சி

எரித்ரோபோய்டின் என்ற ஹார்மோனை சிறுநீரகங்கள் சுரக்கிறது. இது இரத்தச் சிவப்பணுக்களை ஆக்சிஜன் கொண்டு செல்ல உதவும். சிறுநீரக நோய் ஏற்பட்டால் எரித்ரோபோய்டின் சுரப்பது குறைந்து விடும். இதனால் உங்கள் உடலில் உள்ள இரத்தச் சிவப்பணுக்கள் குறைந்து விடும். இதன் மூலம் இரத்த சோகை ஏற்படும். இதன் காரணமாக அனைத்து அணுக்களுக்கும் ஆக்சிஜன் குறைவாக செல்லும். அதனால் தான் பொதுவான அயர்ச்சியும் தீவிரமான சோர்வும் ஏற்படுகிறது.


மயக்க உணர்வு மற்றும் ஒருமுகப்படுத்துவதில் இயலாமை

சிறுநீரக நோயுடன் தொடர்புடைய இரத்த சோகை, உங்கள் மூளைக்கு செல்லும் ஆக்சிஜனை வெறுமையாக்கும். இதனால் மயக்க உணர்வு, ஒருமுகப்படுத்தலில் சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
எப்போதும் குளிர்வது

உங்களுக்கு சிறுநீரக நோய் இருந்தால் வெதுவெதுப்பான சூழல் நிலவினாலும் கூட, இரத்த சோகை இருப்பதால், எப்போதுமே குளிராகவே இருக்கும். பிளோன்ஃபிரிடிஸ் (சிறுநீரக தொற்று) இருந்தால் குளிர் காய்ச்சல் ஏற்படும்.


சருமத்தில் சொறி மற்றும் அரிப்பு

சிறுநீரகம் சரியாக செயல்படாமல் போனால் உங்கள் இரத்தத்தில் கழிவுகள் குவியும். இதனால் சருமத்தில் தீவிரமான சொறிகளும், அரிப்புகளும் ஏற்படும்.


அமோனியா மூச்சு மற்றும் மெட்டாலிக் சுவை

சிறுநீரகம் சரியாக செயல்படாமல் போனால், இரத்தத்தில் உள்ள யூரியாவின் (யூரேமியா) அளவு அதிகரித்து விடும். இந்த யூரியா நம் எச்சிலில் அமோனியாவாக உடையும். இது மூச்சு காற்றை சிறுநீரகம் போன்ற கெட்ட வாடையாக மாற்றும். இதனை அமோனியா மூச்சு என்பார்கள். இதனால் வாயில் எப்போதும் எரிச்சலை ஏற்படுத்தும் மெட்டாலிக் சுவை உண்டாகும்.


குமட்டல் மற்றும் வாந்தி

சிறுநீரக நோய் இருந்தால் இரத்தத்தில் உள்ள கழிவுப் பொருட்கள் குவிந்து கொண்டே போகும். இதனால் குமட்டலும் வாந்தியும் ஏற்படும்.


மூச்சு விடுவதில் சிரமம்

சிறுநீரக நோய்கள் இருந்தால் நுரையீரலில் நீர்மம் சேர்ந்து விடும். மேலும் சிறுநீரக நோயினால் ஏற்படும் பொதுவான பக்க விளைவான இரத்த சோகையும் ஏற்படும். இதனால் உடலுக்கு ஆக்சிஜன் கிடைப்பதில்லை. இதன் விளைவாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.


முதுகு மற்றும் இரு பக்கங்களிலும் வலி

சிறுநீரக நோய் இருந்தால் சில நேரங்களில் வலி ஏற்படும். சிறுநீரக குழாயில் கல் இருந்தால், கீழ் முதுகில் ஆரம்பித்து கவட்டை வரை தீவிரமான வலி ஏற்படும். பாலிசிஸ்டிக் என்ற சிறுநீரக மரபு நோய் இருந்தாலும் கூட வலி ஏற்படும். இதனால் சிறுநீரகத்தில் நீர் நிறைந்த பல கட்டிகள் உருவாகும். நீர்ப்பை சுவர்களில் திசு இடைநார் சிறுநீர்ப்பை அழற்சி என்ற தீவிரமான அழற்சி ஏற்படும் போது, தீவிரமான வலியும் சுகவீனமும் ஏற்படும்.
Read More

Wednesday, September 24, 2014

// // Leave a Comment

கழுத்துவலி தானேன்னு அலட்சியப்படுத்தாதீங்க!


பொதுவாக பெரும்பாலானோர் உடலின் எந்தப் பகுதியில் வலி வந்தாலும் அதை உடனே கவனிப்பார்கள். ஆனால் கழுத்து வலியை மட்டும் அவ்வளவாக பெரிதுபடுத்துவதில்லை. அப்படி வந்தால் எதையாவதொரு ஒரு பெயின் பாம் அல்லது சுளுக்குக்கான மாத்திரையுடன் சமாளிக்கப் பார்க்கிறார்கள். பின்னர் இந்த வலி முற்றி, கழுத்துக்கு பட்டை போட வேண்டிய அளவுக்குவரும் வரை, அதன் தீவிரம் பலருக்கும் தெரிவதில்லை. ஆனால் கழுத்து வலி என்பது, முதுகுத் தண்டு பாதிப்புக்கான எச்சரிக்கை மணி என்கிறார்கள் மருத்துவர்கள்.

இது போன்ற கழுத்து வலிங்கிறது சின்ன வயசு, நடுத்தர வயசு, முதியவர்கள்னு எந்த வயசுலயும் வரலாம். விடலைப் பருவத்துல வரும் கழுத்து வலிக்கான காரணம், அதிகப்படியான உபயோகம். பள்ளிக்கூடத்துல முதல் பெஞ்ச்ல உட்கார்ந்து, போர்டை அண்ணாந்து பார்க்கிறது, தரைல உட்கார்ந்து எழுதறது, சரியான நிலைல உட்காராததுனால வலி வரலாம். கம்ப்யூட்டரை சரியான பொசிஷன்ல வச்சு உபயோகிக்காதது, எப்பப் பார்த்தாலும் லேப்டாப் முன்னாடியே இருக்கிறது, படுத்துக்கிட்டு கம்ப்யூட்டரை உபயோகிக்கிறது.

இதெல்லாம் இளம் வயசுக்காரங்களுக்கு வரும் கழுத்து வலிக்கான காரணங்கள். கழுத்தின் பக்கத்துல உள்ள தசைகள் சோர்வுற்று, கழுத்து எலும்பின் மத்தியில் உள்ள சவ்வில் அழுத்தம் அதிகமாகும். ‘செர்வைகல் டிஸ்க்’னு சொல்ற இந்த சவ்வு விலகி, பக்கத்துல உள்ள நரம்புகளை கழுத்து வலியை கவனித்தால் மருததுவம அழுத்தும். அப்படி உண்டாகிற வலி, கைகளுக்கும், கால்களுக்கும் பரவலாம். வயசானவங்களுக்கு வரக்கூடிய கழுத்து வலியை ‘செர்வைகல் ஸ்பான்டிலைட்டிஸ்’னு சொல்றோம்.

கொஞ்சம் விரிவாக சொல்வதானால் இந்த எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பது சித்தர்களின் முதுமொழியாகும். மனிதனின் இயக்கங்கள் அனைத்திற்கும் உள்ள சூட்சும பகுதிதான் சிரசு. சக்தியை உணரும் தன்மை அனைத்தும் சிரசின் வழியே தான் நடை பெறுகிறது. இத்தகைய சக்திகள் அனைத்தையும் தன்னுள் அடக்கி பல கோடிக் கணக்கான அணுக்களைக் கொண்ட பந்து போல தோற்றமளிக்கும் சிரசை தாங்கி நிற்பது கழுத்துப் பகுதிதான்.

கழுத்து உடலின் முக்கிய உறுப்பாகும். கழுத்தில்தான் முக்கிய நாடி நரம்புகள் நெருக்கமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கும். உடலுக்கும் சிரசுக்கும் இரத்தம் மற்றும் நரம்புகள் பிரயாணம் செய்கின்றன. கழுத்தின் மையமாக தண்டுவட எலும்புகள் உள்ளன. இதில் ஏழு எலும்புகள் உள்ளன. அந்த எலும்பு சட்டத்தைச் சுற்றி தசைகளும், தசை நார்களும் உறுதி கொடுக்கின்றன. இந்த கழுத்து எலும்பிலிருந்து தான் கைகளுக்கு போகும் நரம்புகள் வெளிவருகின்றன. மேலும் உணவுக்குழாய், மூச்சுக்குழாய் உள்ளன. மூளைக்கும் இருதயத்திற்கும் இடையேயான இரத்த ஓட்டம் கழுத்தின் வழியேதான் நிகழ்கிறது.
முதுமைப் பருவத்தில் கழுத்து எலும்புகளின் இணைப்புகளில் ஏற்படும் தேய்மானத்தைத்தான் செர்விகல் ஸ்பாண்டிலோஸிஸ் என்று அழைக்கின்றனர். இதை தமிழில் தோள்பட்டை வாதம் என்கின்றனர். இது பொதுவாக நடுத்தர வயதுடையோரிடமும், முதியோரிடமும் குறிப்பாக ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வோரிடமும் காணப்படுகிறது.

குடல், வயிறு இவற்றின் மூலப் பகுதிகளில் உஷ்ணம் அதிகமானால் வயிற்றுப் பகுதியில் உள்ள அபான வாயுவின் அழற்சி காரணமாக குடல் மேலும் உஷ்ணப்பட்டு உடலில் உள்ள நீரானது அபான வாயுவால் மேல்நோக்கி தள்ளப்படுகிறது. இதனால் உடலில் உள்ள நீர் தலைப்பகுதிக்கு வந்து கோர்த்துக்கொள்ளும்.

பின்பு கழுத்து நரம்பு வழியாக முதுகுப் பக்கம் (பின்பகுதி) நீர் இறங்கும். இவ்வாறு இறங்கும் நீரானது கழுத்துப் பகுதிக்கு வரும்போது அதன் தன்மை மாறி பசை போல் கடினமாகிறது. பின்பு அது இறுகித் தடித்து கடினமானது போல் ஆகிவிடும். இதுதான் தோள்பட்டை வாதம். உதாரணமாக கடலில் உள்ள நீரானது அதிக வெப்பத்தால் ஆவியாவி மேல்சென்று மேகமாக மாறி பின் மழை நீராக பொழிவது போல் குடலில் உள்ள நீர் உஷ்ணமாகி ஆவியாக மாறி மேல்நோக்கி சிரசுக்கு சென்று அங்கு நீராக மாறி பிறகு கழுத்துப் பகுதிக்கு இறங்குகிறது. இதைத்தான் சித்தர்கள் அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்கின்றனர்.



அறிகுறிகள்

கழுத்துப் பகுதியில் வலி ஏற்படும். கைகள் மரத்துப் போகும். சுண்டுவிரல் செயலிழுந்து போகும். மன எரிச்சல் உண்டாகும். தூக்கமின்மை ஏற்படும். எப்போதும் கோபம் கொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். கண் எரிச்சல், உண்டாகும். எழுதும்போது கை விரல்களில் வலி ஏற்படும். படிக்கும்போது கழுத்து வலி உண்டாகும். மேலும் குனியும் போதும், நிமிரும்போதும் தலை சுற்றி கண்ணில் மின்னல் போல் தோன்றி உடல் அதிரும். நரம்புகள் இறுகும். ஒரு சிலருக்கு நடக்கும்போது தலை சுற்றல் உண்டாகும்.

கழுத்து கடுத்து, தடித்து காணப்படும். மன நிம்மதியின்றி காணப்படுவார்கள். பித்த உடற்கூறு கொண்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் உண்டாகும். வாத உடலமைப்பு கொண்டவர்களுக்கு கழுத்து இறுகி திருப்ப முடியாத நிலை ஏற்படும். கப உடலமைப்பு கொண்டவர்களுக்கு கழுத்து பகுதி தடித்து உப்பு நீர் கலந்து கருத்துப்போய் பட்டை பட்டையாக தடித்து காணப்படும். அதிக வியர்வை உண்டாகும். கழுத்துப் பகுதியில் எரிச்சல் தோன்றும்.

ஒரு சிலருக்கு இடது பக்கமாக கழுத்துப் பகுதியிலிருந்து நீர் கீழிறங்கி தோள்பட்டையில் வலியை உண்டாக்கும். இது நெஞ்சு வலியைப் போன்று தோன்றும். நெஞ்சு வலிக்கும் தோள்பட்டை வலிக்கும் வித்தியாசம் கண்டறிவது கடினம்.

தொடர்ந்து பல நாட்களாக கழுத்து வலி காணப்படும் அந்த வலியானது தோள்வரை பரவும், கழுத்துப் பகுதியில் கை பட்டவுடன் வலி தோன்றும்.


கழுத்து வலி வரக் காரணம்

மலச்சிக்கல், குடலில் வாய்வுக் கோளாறு, மூலச்சூடு, தலையில் நீர் கோர்த்தல், மன அழுத்தம் போன்ற காரணங்களால் தோள்பட்டை வலி உண்டாகிறது.


கழுத்துவலியை தவிர்க்கும் முறை

மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும். வாயுவை உண்டாக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது தாகம் ஏற்பட்டால் குளிரூட்டப்பட்ட நீரோ, குளிர்பானங்களோ அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது.

வாகனங்களை மிதமான வேகத்தில் ஓட்ட வேண்டும். அடிக்கடி பிரேக் போடுவதை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை சிறு சிறு தூரங்களுக்கு நடந்து செல்வது நல்லது. ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்திருப்பதை தவிர்க்க வேண்டும். கழுத்து வலிக்கு இந்திய மருத்துவ முறையில் நிறைய மருந்துகள் உள்ளன. குறிப்பாக வர்ம பரிகார முறையில் உள் மருந்துகள் சில கொடுத்து கழுத்துப் பகுதி தோள்பட்டைப் பகுதியில் எண்ணெய் தடவி சீராக கழுத்தை நீவிவிட்டு வந்தால் நாளடைவில் இரத்த ஓட்டம் சீராகும். தோள்பட்டை வலியும் நீங்கும்.

வர்ம பரிகார முறையில் இதை எளிதாக குணப்படுத்தலாம். அறுவை சிகிச்சை தேவையில்லை. இது போல் சித்த மருத்துவ முறையில் சீர்கேடடைந்த உறுப்புகளுக்கு பலம் கொடுக்க கிழி ஒற்றடம், பிழிச்சல் முதலியன செய்வார்கள். இவ்வாறு செய்து வந்தால் நோயிலிருந்து விடுபட்டு உறுப்புகளில் உள்ள வலி, குத்தல், குடைதல், இசிவு, பிடிப்பு, வீக்கம் முதலியன மெல்ல மெல்லக் குறைந்து அவற்றின் தளர்ச்சி, செயலின்மை போன்றவை நீங்கி உடல் பலம் பெறும்.இந்த முறையில் சிகிச்சை செய்வதின் மூலம் கழுத்து வலிக்கு அறுவை சிகிச்சை செய்வதை தவிர்க்கலாம்.


உணவு

பொதுவாக வாயுவின் சீற்றத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகளைக் குறைத்து எளிதில் சீரணமாகக் கூடிய சத்துள்ள பொருட்களை உண்பது நல்லது. கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


ஒதுக்க வேண்டிய உணவுகள்

மொச்சை, உருளை, தக்காளி, வாயுவை உண்டாக்கு உணவுகளை தவிர்க்க வேண்டும்.


படுக்கை

தலையைணை இல்லாமல் தூங்குவது நல்லது. மேடுபள்ளம் இல்லாத சமமான படுக்கையே நல்லது. அதிக குளிர்காற்று உடலில் படும்படியாக படுக்கக்கூடாது.

இத்தகைய நடைமுறைகளை கடைப்பிடித்தால் தோள்பட்டைவாதம் என்ற கழுத்து வலியிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம் என்கிறார்கள்!
Read More
// // Leave a Comment

கழுத்துவலி எனும் தோள்பட்டை வாதம் தீர‌


உடல், மனம், உள்ளம் இம்மூன்றும் பாதிக்கப்படும்போது நோய்கள் தானாக வே மனிதனை ஒட்டிக்கொள்கின்றன. இவை சீராக செயல்பட்டால்தான் மனி தன் நோயின்றி வாழமுடியும்.
மனித உடலானது பல கோடி நரம்பு களாலும், தசைகளாலும், இரத்த நாளங் களாலும், எலும்புகளாலும் பின்னிப் பிணையப் பட்டதாகும். அண்டம் என்ற பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் பிண் டம் என்ற இந்த மனித உடலிலும் அமைந்துள்ளது. இவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.

இப்படி இயற்கையால் உருவாக்கப்பட்ட மனித இனம் நோயின் கோரப் பிடியில் சிக்கி தவிக்கிறது.

குறிப்பாக முதுகுவலி, கீழ்த்தண்டு முதுகுவலி, கழுத்துவலி, கை கால் மூட்டு வலி போன்றவற்றால் அதிகம் பேர் அவதிப்படுகின்றனர். குறிப்பாக நீரிழிவு, இரத்த அழுத்த நோயாளிகள் இத்தகைய நோயின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இந்த வகையில் கழுத்துவலி என்ற தோள் பட்டை வலி நம்மில் அனேக பேரைப் பாதிக் கிறது.

“எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதா னம்” என்பது சித்தர்களின் கூற்று. மனிதர்களின் இயக்கம் அனைத்திற் கும் முக்கிய காரணமாக செயல் படுவது சிரசு என்ற தலைப்பகுதி தான்.

பிரபஞ்ச சக்திகளை உணரும் தன்மை அனைத்தும் சிரசின் வழியே தான் நடைபெறுகிறது. இந்த சிரசில் தான் மனிதனை இயக்கும் ஐம் புலன்களும் அமைந்துள்ளன.

இத்தகைய சிறப்புகள் கொண்ட தலைப்பகுதியை உடலோடு இணைக்கும் பாலம் தான் கழுத்துப்பகுதி. கழுத்துப்பகுதி வழியாகத் தான் உடலுக் கும் சிரசுக்கும் நரம்புகள், இரத்த நாள ங்கள் செல்கி ன்றன.

கழுத்தானது உடலின் முக்கிய உறுப்புகள் செயல்படும் பகுதி எனக் கூறலாம்.

கழுத்தின் மையப் பகுதியில் ஏழு தண்டு வட எலும்புகள் உள்ளன. இவற்றைச்சுற்றி தசைகளும், தசை நார்களும் இணைந்து உள்ளன. மேலும் கழுத்து எலும்பிலிருந்து தான் கைகளுக்கு போகும் நரம் புகள் வெ ளிவருகின்றன.

இப்படி உடலுக்கும் சிரசிற்கும் பாலமாக இருக்கும் கழுத்துப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டால் நம்முடைய அன்றாட செயல்கள் அனைத்தும் கடினமாகிவிடுகின்றன.

இது பெரும்பாலும் 40 வயதைத் தாண்டியவர்களுக்கே ஏற்படுகி றது. இந்த எலும்பு இணைப்புகளில் ஏற்படும் தேய்மானத்தைத்தான் செர்விகல் ஸ்பாண்டிலோஸிஸ் (Cervical Spondylosis) என்று ஆங்கி ல மருத்துவ முறைகளில் கூறுகி ன்றனர்.

இதை வர்ம மருத்துவத்தில் தோள் பட்டை வாதம் என்று அழைக்கின்ற னர். இது குறிப்பாக அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வோர்களையே அதிகம் பாதிக் கிறது. உடல் உழைப்பின்மை, உட ற்பயிற்சியின்மை, சீரற்ற உணவு முறை, தூக்கமின்மை, இவற்றினாலும் உண்டாகிறது.

கழுத்துவலி வரக் காரணங்கள்

செரியாமை, மலச்சிக்கல், வாயுக்கோளாறுகள், குடல் சூடு, அஸ்த சூடு, மூலச்சூடு இவற்றினாலும்,அதீத சிந்தனை, மனஅழுத்தம், தூக்கமின்மை, கோபம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தல், அதிகமான நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்தல், தொலைக்காட்சி பார்த்தல், போன் றவற்றாலும் இத்தகைய கழுத்து வலி உருவாகிறது.

நேரங்கடந்த உணவு, அளவுக்கதிக மான உணவு, எளிதில் சீரணமாகாத உணவு, கோபம், பயம் எரிச்சல் உள் ள போது உண்பது, நீண்ட நாள் பத ப்படுத்தப்பட்ட உணவுகளை உண் பது, பித்தத்தை அதிகரிக்கும் உண வுகள், வாயுவை அதிகரிக்கும் உண வுகள் என பலவற்றை உண்பது போன்றவற்றாலும் கழுத்துவலி உண்டாகிறது.

இப்படிப்பட்ட உணவுகளை உண்பதால் குடலில் நீரானது அதிகம் சுரந்து செரியாமை ஏற்படுகிறது. பின் அது மலச்சிக்கலாக மாறுகி றது. இதனால் குடலில் அபான வாயு சீற்றம் கொண்டு குடல் நீரை மேல்நோக்கித் தள்ளுகிறது.

இந்த குடல் நீர் ஆவியாகி சிரசை நோக்கி சென்று அங்கே தங்கு கிறது. பின்பு தலையின் பின் பகு தி நரம்புகள் வழியாக கீழ் இறங்கி கழுத்துப் பகுதிக்கு வரும்போது அங்கு தசைகளையும் நரம்புக ளையும் சுற்றிக் கோர்த்துக் கொ ள்கிறது.

பின்பு அது பசைத் தன்மையடை ந்து பந்துபோல் கழுத்து தசை எலும்புகளையும், நரம்புகளையும் இறுகச் செய்கிறது. இதனால் கழுத்துப்பகுதி திரும்ப முடியாமல் போகிறது. மேலும் அங்கு கைகளின் நரம்புகள் ஆரம்பிப்பதால் அவைகளும் தோள் பட்டை பாகங்களும் இறுகி வலியை உண்டா க்குகிறது.

உதாரணமாக கடலில் உள்ள நீரானது அதிக வெப்பத்தால் ஆவியா கி மேல் சென்று மேகமாக மாறி பின் மழை நீராக பொழிவது போல் குடலில் உள்ள நீரும் ஆவியாக மாறி சிரசை அடையும்போது அவை நீராக மாறி கழுத்துப் பகுதிக்கு இறங்குகிறது. இது அவரவர் உடற்கூறுகளுக்குத் தகுந்த வாறு பாதிப்புகளை உண்டு பண்ணு கிறது.

குறி குணங்கள்

தலைவலி, மூக்கில் நீர்வடிதல், மண் டைக்குத்து, பின் கழுத்துப் பகுதியில் பிடிப்பு போன்றவை உண்டாகும். குனி ந்து நிமிரும்போது தலை சுற்றி கண்ணில் மின்னல் போல் தோன் றச்செய்யும். உடல் அதிர்ந்து நரம்புகள் இறுகும். சிலருக்கு எழுந்து நடக்கும்போது தலை சுற்றல் மயக்கம் உண்டாகும்.

கழுத்துப் பகுதியில் கைகளின் நரம்புகள், எலும்புகள் ஆரம்பிப்பதா ல் கைகள் மரத்துப் போகும். சுண்டு விரல் பகுதிகள் செயலிழந்து காணப்படும். மன எரிச்சல் உண் டாகும். எதிலும் விருப்பம் தோ ன்றாது. அதிக கோபம் உண்டாகு ம், தூக்கமின்மை ஏற்படும். கண் எரிச்சல் உண்டாகும். அதிக நேர ம் படிக்கும்போது கழுத்துப் பகு தியில் வலி உண்டாகும். எழுது ம்போது கை விரல்களில் வலி ஏற்படும்.

கழுத்துப் பகுதி தடித்துக் காணப் படும். மேலும் கழுத்து வலியானது உடற்கூறுகளுக்கு தகுந்தவாறு அறிகுறிகள் தென்படும். வாத உடற்கூறு கொண்டவர்களுக்கு கழுத் து இறுகி திரும்ப முடியாத நிலை உண்டாகும்.

பித்த உடற்கூறு கொண்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் தலை சுற் றல் ஏற்படும்.

கப உடற்கூறு கொண்டவர்களுக்கு கழுத்துப் பகுதி தடித்து உப்புநீர் கலந்து கருத்துப்போய் பட்டை பட்டையாகத் தோன்றும். மேலும், உடற்கூறுகளுக்குத் தகுந்தவா று, ஒருசிலருக்கு ஒற்றைத் தலைவலியை உருவாக்கும்.

இதே நீர், தலையில் (சிரசில்) உள்ள தனஞ்செயனில் நின்று கொண்டு, சித்த பிரம்மையை ஏற்படுத்தும். இதே நீர், மூக்கில் நீர்வடியச் செய்து அதுவே சை னஸ் ஆக மாறிவிடும்.

இதே நீர் அதிக பித்த நீருடன் கலந்துவிடுமானால், பித்த வாதமாக மாறி ரத்த அழுத்தத்தை உண்டுபண்ணுகிறது.

பொதுவாக எந்த உடற்கூறு கொண்டவர்களும் தோள்பட்டை வலி உண்டானால் அது கழுத்துப்பகுதியில் அதிக வியர்வையை உண் டாக்கும். ஒரு சிலருக்கு கழுத்துப் பகுதியிலிருந்து நீர் கீழ் இறங்கி தோள்பட்டைப் பகுதியில் அதிகமான வலியை ஏற்படுத்தும்.

சில சமயங்களில் இது நெஞ்சுவலி என நினைக்கத் தோன்றும். நெஞ்சு வலிக்கும், தோள்பட்டை வலிக்கு ம் உள்ள வித்தியாசத்தை கண்ட றிவது அவ்வளவு சுலபமல்ல. இந் த கழுத்து வலியானது நாளடைவி ல் தலைப் பகுதியான சிரசை ஆட ச் செய்துவிடும்.



கழுத்து வலியைப் போக்க

கழுத்து வலியை எக்ஸ்ரே மூலம் படம் பிடித்து பார்த்து உடனே கழுத்துப் பட்டையை அணிய பரிந் துரைக்கின்றனர் இன்றைய நவீன மருத்துவர்கள். ஆனால் இந்திய மருத்துவமுறையில் கழுத்து வலியை முழுமையாகப் போக்க சிற ந்த சிகிச்சை முறைகள் உள்ளன.

அகத்தியர் அருளிய வர்ம பரிகார முறையில் உள் மருந்துகள் கொடுத்தும் கழுத்து, தோள்பட்டைப் பகுதி யில் மூலிகை தைலங் கள் தடவி சீராக கழுத் தை வர்ம முறையில் நீவி விட்டு வந்தால் கழுத்துப் பகுதியில் உ ள்ள எலும்புகளைச் சுற் றியுள்ள பசைத் தன் மை இளகி சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும். நாளடைவில் வலி நீங்குவதுடன் மேற்கண்ட குறிகுணங்களும் மாறும்.

இதுபோல் சித்தா, ஆயுர்வேத முறைகளிலும் முழுமையாக கழுத் து வலியை குணப்படுத்தலாம்.

கழுத்து வலி வராமல் தடுக்க:

இன்றும் கிராமங்களில் பெண்கள் தண்ணீரை தலையில் சுமந்து செல் கின்றனர். மூட்டைகளையும் சுமக் கின்றனர். 100 கிலோ அளவு எடை யைத்தாங்கும் கழுத்து. எந்தப் பொ ருளும் தூக்காதவர்களுக்கு தலை யைத் தாங்கமுடியாமல் போவதற் கு காரணம் உணவு முறை மாறுபா டும், முறையான உடல் உழைப்பும் இல்லாததே.

உணவு முறை:

நேரம் கடந்த உணவு, அதீத உணவு, எளிதில் சீரணமாகாத உணவு, நொறுக்குத்தீனி, மது, போதைப்பொருள், நீண்ட பட்டினி, வாயு பதார்த்தங்கள் உண்பது. அல்லது அதிக குளிர்ச்சியூட்டும் உணவு களை உண்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

மலச்சிக்கலைப் போக்குவதுடன், தினமும் மதிய வேளையில் ஒரு கீரையை சேர்த்து சாப்பிட வேண்டும். இரவில் கீரை, தயிர் இவற் றை தவிர்க்க வேண்டும்.

இரவுநேர உணவுமென்மை யானதாவும், எளிதில் செரி மானம் ஆகக்கூடியதாக வும் இருக்கவேண்டும். பாதி வயிற்றுக்கு சாப்பிடு வது நல்லது. மேலும் படுக்கைக்கு செல்லும் 2 மணி நேரத்திற்கு முன் இரவு உணவை முடித்துவிட வேண்டும்.

குறிப்பாக காலை உணவை தவிர்க்க கூடாது. இரவு முழுவதும் காலியாக உள்ள வயிற்றில் காலை உணவு சாப்பிடாமல் இருந்தா ல் வயிற்றில் வாய்வு தொல்லை உண்டாகும். இதனால் காலை உணவை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.

பிராய்லர் கோழி, முட்டை, பதப் படுத்தப்பட்ட உணவு, ஊறுகாய் இவற்றை தவிர்ப்பது நல்லது.


உடல் உழைப்பு

உடல் உழைப்பு என்பது பலருக் கு இல்லாமல் போய்விட்டது. காரணம் கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர்களே அதிகம் உள்ளனர். இவர்கள் தினமும் அரை மணி நேரமாவது ஒதுக்கி யோகா, உடற்பயிற்சி செய்வது.

யோகா ஆசிரியரை அணுகி முறைப்படி யோகா கற்றுக் கொள்வது நல்லது. மன உளைச்சல், மன எரிச்சல், மனஅழுத்தம், டென்ஷன் இவைகளை குறைக்க தியானம் செய்யலாம்.

அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் சிறிது நேரம் எழுந்து நடந்து பின் வேலை செய்யலாம். குறிப்பாக கணினி மு ன் வேலை செய்பவர்கள் சிறிது ஓய் வெடுத்து பின் வேலை செய்வது நல்லது.

படுக்கை

தலையணை அதிக உயரமில்லாம ல் இருக்க வேண்டும். பள்ளம் மேடு இல்லாத படுக்கையிலேயே தூங்க வேண்டும். அதிக குளிர் காற்று உட லில் படும்படியாகத் தூங்கக்கூடாது.

மருத்துவ முறை

கழுத்து வலிக்கு கழுத்துப்பட்டை, அறுவை சிகிச்சை முறை மட்டு ம்தான் சிகிச்சைமுறை என முன்பு பலர் நினைத்தனர். ஆனால் அறுவை சிகிச்சையில்லாமல் வர்ம பரி கார முறையில் இரண்டு வாரங்கள் தொடர்ந்து உள்மருந்தும், தைலம் தட வி ஒற்றடம் கொடுத்தும் தோள் பட் டை வர்மத்தை , (தோள்பட்டை வாத ம்)இயக்கி இறுகிப்போன கழுத்து பகுதி களை சரிசெய்து வலியைப் போக்கி இரத்த ஓட்டத்தை சீர்படுத்தலாம். இது வே கழுத்து வலிக்கு சிறந்த சிகிச்சை முறையாகும்.

மேலும் வர்ம மருத்துவத்தில் வயிற் று உபாதைகளுக்கு மருந்து கொடுத்து மீண்டும் கழுத்தில் நீர் கோர்த்துக் கொ ள்ளாமல் பாதுகாக்கலாம்.

வர்ம சிகிச்சை முறையில் அறுவை சிகிச்சை மற்றும் கழுத்து பட் டை அணியாமல் கழுத்து வலியை பூரண குணமடைய செய்யலா ம்.

மேற்கண்ட முறைகளை முறையாகக் கடைப்பிடித்து கழுத்து வலி யிலிருந்து விடுபடலாம்.

Source : http://vidhai2virutcham.com/2012/03/29/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/
Read More

Tuesday, September 23, 2014

// // Leave a Comment

பெருங்காயம்


பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நலன்கள்

பெருங்காயத்திற்கு இந்திய சமையல் கலையில் ஒரு தனிப்பட்ட இடம் உண்டு. மற்ற மசாலா பொருட்களுடன் சேர்த்து சமைக்கும் போது வரும் பெருங்காயத்தின் நறுமணம், அந்த உணவிற்கு ஒரு திகைப்பூட்டும் சுவையை அளிக்கிறது. இதனை பெரும்பாலும் பருப்பு வகைகள், சாம்பார் மற்றும் பலதரப்பட்ட காரமான சைவ உணவுகளுடன் சேர்க்கப்படும்.

பெருங்காயம் உணவில் சுவையூட்டுப் பொருளாகவும், ஊறுகாய்களிலும் செரிமானத்திற்குஉதவும் பொருளாக பயன்படுகின்றது.

பெருங்காயம் சமைக்காத பொழுது நெடியுள்ள, வெறுக்கத்தக்க மணத்தைக் கொண்டிருக்கின்றது. ரசத்தையும், சாம்பாரையும் கமகமக்க வைக்கிற பெருமை பெருங்காயத்தை தான் சேரும். இதை, கடவுளர்களின் மருந்து என்று குறிப்பிடுகிறார்கள்.

பச்சையாக இருக்கும் போது சகிக்க முடியாது இதனுடைய வாசனை சமையலில் சேர்த்த பிறகு தான் தெரியும்.

வெங்காயம், பூண்டுக்கு உள்ள அதே மருத்துவக் குணங்கள் பெருங்காயதுக்கும் உள்ளன. நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும்.

பெருங்காயத்தில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. மீன் போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிட்டு புரதத்தைப் பெற முடியாத சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கு அதை ஈடுகட்டும்.

மேலும் பெருங்காயமானது தாளிக்கும் போதும், ஊறுகாய்க்கும் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு சில மருத்துவ குணங்களும் உண்டு. இது உணவுக்குழாய் வாயுநிலை தடுப்பானாகவும், உணர்ச்சியைக் கிளறிவிடும் தடுப்பானாகவும், நுண்ணுயிர் கொல்லியாகவும், மலமிளக்கியாகவும், நரம்பு உந்தியாகவும், சளி நீக்கியாகவும் மற்றும் தூக்க மருந்தாகவும் பயன்படுகிறது. இப்போது பெருங்காயத்தால் ஏற்படும் சில உடல் நல நன்மைகளை பார்க்கலாமா?


செரிமானமின்மை

ஆதி காலத்திலிருந்து பெருங்காயம் செரிமானமின்மைக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனாலேயே இது அன்றாடம் சமைக்கும் உணவில் சேர்க்கப்படுகிறது. உணர்ச்சியைக் கிளறிவிடும் தடுப்பானாகவும் ஆக்சிஜெனேற்றத் தடுப்பானாகவும் இது பயன்படுவதால், செரிமானப் பிரச்சனைகளான வயிற்று வலி, வாயு, குடல் புழுக்கள், வயிற்றுப் பொருமல், எரிச்சல் ஏற்படுத்தும் குடல் புண்கள் போன்ற சிலவற்றை குணப்படுத்த உதவகிறது. சிறிது பெருங்காயத்தை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து பருகினால், செரிமான தொந்தரவுகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.


மாதவிடாய் பிரச்சனை

பெருங்காயத்தின் பயன்பாட்டினால் பெண்களுக்கு மாதவிடாயினால் ஏற்படும் பிரச்சனைகளான வயிற்று வலி, சதை பிடிப்பு, ஒழுங்கற்ற மாதவிலக்குக் காலம் மற்றும் வாய்வுகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பெண்ணுக்கு ஏற்படும் புண்களுக்கும், வெண் கசிவுகளுக்கும் இது சிறந்த மருந்தாக விளங்குகிறது.


சுவாச பிரச்சனை

சுவாச குழாய் புண்களுக்கு பயன்படுத்தப்பட்ட பழமையான மருந்து பெருங்காயம். இது ஒரு சுவாச உந்தியாக, சளியை எடுக்கும் சளி நீக்கியாகவும், நெஞ்சு அடைத்தல் நிவாரணியாகவும் செயல்படுகிறது. பெருங்காயத்தை தேன் மற்றும் இஞ்சியுடன் கலந்து குடித்தால் சுவாசக் கோளாறுகளான வறட்டு இருமல், ஆஸ்துமா, மார்புச் சளி போன்றவைகள் குணமாகும்.


சர்க்கரை நோய்

பெருங்காயம் கணையச்சிரை அணுக்களை அதிக இன்சுலின் சுரக்க வைப்பதால் அது இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை குறைக்க உதவும். எனவே பெருங்காயம் சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. இரத்த சர்க்கரை அளவை குறைக்க, பாகற்காயில் பெருங்காயத்தை சேர்த்து சாப்பிடலாம்.


உயர் இரத்த அழுத்தம்

பெருங்காயத்தில் உள்ள கவ்மரின் என்ற பொருள், இரத்தத்தை மெலிவூட்டி இரத்த உறைதலை தடுக்கும். இதன் உறைவெதிர்ப்புத் தன்மை மற்றும் குணப்படுத்தும் ஆற்றல் இரத்தக் கொழுப்பைக் குறைத்து உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.


நரம்பு கோளாறுகள்

இந்த வாசனைப் பொருள் நரம்பு உந்தியாக செயல்படும். எனவே இதை நரம்பு தளர்ச்சி நோய், தசை வலிப்பு, மயக்க நிலை மற்றும் இதர நரம்பு சீர்குலைவுகளுக்கு பயன்படுத்தலாம்.


வலி

பெருங்காயத்தை தண்ணீரில் கலந்து பருகினால் தலைவலி மற்றும் கடுமையான ஒற்றை தலைவலி நீங்கும். அதிலும் எலுமிச்சை பானத்துடன் ஒரு சிட்டிகை பெருங்காயம் கலந்து குடித்தால், பல் வலி நீங்கும்.


போதை வஸ்துவின் நச்சுமுறி

பெருங்காயம் மிகச்சிறந்த போதை வஸ்துக்களின் நச்சு முறிவாக செயல்படும்.


புற்று நோய்

பெருங்காயம் மிகச்சிறந்த ஆக்சிஜெனேற்றத் தடுப்பானாக செயல்பட்டு, உடம்பின் அணுக்களை பாதுகாக்கும். ஆய்வின்படி இது ஒரு புற்றுஎதிர்ப்பியாக இருப்பதால், புற்றுநோயை உண்டாக்கும் அணுக்கள் வளருவதை தடுக்கின்றன.


சரும நோய்கள்

சந்தையில் கிடைக்கும் பல சரும பாதுகாப்பு பொருட்களில் பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள் இருப்பதால், சரும சிகிச்சைக்கு உகந்ததாக இது விளங்குகிறது. இதை சருமத்தின் மேல் நேரடியாக தடவினால், தோல் தடிப்பு மற்றும் தோல் காய்ப்பு நீங்கும்.


அடிக்கடி தலைசுத்தல்

50 கிராம் சீரகத்தில் 2 ஸ்பூன் உப்பு, சிறிதளவு பெருங்காயம், ஒரு பெரிய எலுமிச்சம்பழத்தின் சாற்றையும் சேர்த்து ஒரு நாள் ஊறவைத்து அடுத்த நாள் வெயிலில் நன்றாகக் காயவைத்து ஒரு பாட்டலில் வைத்துக் கொண்டு தலைச்சுத்தல், வயிற்றுப்பொறுமல், பசியின்மைக்கு இதில் அரை ஸ்பூன் சீரகத்தை எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மிகவும் நல்லது.


ஜீரண கோளாறு

செ‌ரியாமை, ம‌ந்த‌ம், பு‌ளியே‌ப்ப‌ம், வா‌ய்‌ப்பு, வ‌யி‌ற்றுவ‌லி போ‌ன்றவ‌ற்‌றி‌ற்கு பொ‌ரி‌த்த பெரு‌ங்காய‌ம், உல‌ர்‌ந்த துள‌சி இலை சம அளவு எடு‌த்து சூரண‌ம் செ‌ய்து கொ‌ள்ளவு‌ம்.


பல்வலி

பெருங்காயப் பொடியை வெறுமனே வாணலியில் போட்டு வறுத்து, வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால், வலி நொடியில் பறந்துவிடும்.அதோடு வாய் துர்நாற்றமும் போய்விடும்.


ஆஸ்துமா தொந்தரவு

ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுகிறவர்கள், பெருங்காயப் பொடியை அனலில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் உடனே தீரும்.


ஆண்மை அதிகரிக்க

சமையல் பொருளான பெருங்காயம் ஆண்களின் ஆண்மை குறைவை குணப்படுத்த உதவுகிறது. மேலும் இது ஆண்மையை தூண்டும் பாலுணர்வூக்கியாக விளங்குகிறது.


சளியை போக்கும்

சுவாச குழாய் புண்களுக்கு பயன்படுத்தப்பட்ட பழமையான மருந்து பெருங்காயம். இது ஒரு சுவாச உந்தியாக, சளியை எடுக்கும் சளி நீக்கியாகவும், நெஞ்சு அடைத்தல் நிவாரணியாகவும் செயல்படுகிறது.

பெருங்காயத்தை தேன் மற்றும் இஞ்சியுடன் கலந்து குடித்தால் சுவாசக் கோளாறுகளான வறட்டு இருமல், ஆஸ்துமா, மார்புச் சளி போன்றவைகள் குணமாகும்.
Read More
// // Leave a Comment

புளி


உணவுப் பொருட்களுக்கு புளிப்பு சுவையும், நறுமணமும் தருவது தான் புளி.

* புளிப்பு சுவையுடைய புளியம்பழத்தில் என். எஸ்.பி. எனப்படும் நார்ச்சத்துப் பொருள் மிகுதியாக உள்ளது. 100 கிராம் புளி சதைப்பற்றில் 13 சதவீதம் என்.எஸ்.பி. நார்ப்பொருள் உள்ளது. உணவுப் பொருட்களை உப்பி பருக்கச் செய்வதில் என். எஸ்.பி. பங்கெடுக்கும்.

* மலச்சிக்கலை தடுக்கும் ஆற்றலும் என்.எஸ்.பி. நார்ப் பொருளுக்கு உண்டு. புற்றுநோய் மற்றும் பெருங்குடல் சதைகளை பாதிக்கும் நச்சுப் பொருட்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.

* மூல வியாதியை உருவாக்கும் ஒருவித உப்புப் பொருட்களை கட்டுப்படுத்துவதிலும் என்.எஸ்.பி. பங்கெடுக்கிறது. கெட்ட கொழுப்புக்களையும் இது கட்டுப்படுத்துகிறது.

* எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் மிகுந்திருப்ப தைப்போல புளியில் அதிக அளவு டார்டாரிக் அமிலம் உள்ளது. இது உணவுக்கு புளிப்பு சுவையைத் தருகிறது. மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாகவும் டார்டாரிக் அமிலம் செயலாற்றும். தீங்கு விளைவிக்கும் ஆக்சிஜன் பிரீ-ரேடிக்கல்களிடம் இருந்து உடலை காக்கும்.

* புளியம்பழத்தில் லிமோனென், ஜெரனியால், சபரால், சின்னாமிக் அமிலம், மீதைல் சாலிசிலேட், பைராசின், அல்கைல்தையாசோல் போன்ற துணை ரசாயன பொருட்களும் உள்ளன. இவை பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டவை.

* அத்தியாவசிய தாதுக்களான தாமிரம், பொட்டாசியம், கால்சியம், இரும்பு, செலினியம், துத்தநாகம் மற்றும் மக்னீசியம் போன்றவையும் புளியில் இருக்கிறது. பொட்டாசியம் இதயத் துடிப்பையும், ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த வல் லது. இரும்புத்தாது ரத்த சிவப்பணு உற்பத்தியில் பங்கு வகிக்கும்.

* வைட்டமின் ஏ, போலிக் அமிலம், ரிபோபிளேவின், தயாமின், நியாசின், வைட்டமின்-சி போன்ற வைட்டமின்களும் புளியம் பழத்தில் உள்ளன. இவை நொதிகளின் செயல்பாட்டிற்கு உதவுபவை. நோய் எதிர்ப்பு பொருட்களாகவும் செயலாற்றும். வளர்ச்சிதை மாற்றத்திலும் பங்கெடுக்கும்.
Read More
// // Leave a Comment

எலுமிச்சை டயட்


உடல் எடையை குறைக்க வேண்டுமா?

 அனைவருக்குமே எலுமிச்சையில் நிறைய உடல் மற்றும் அழகு நன்மைகள் நிறைந்துள்ளன என்பது தெரியும்.

அதிலும் இந்த புளிப்புச் சுவையுடைய பழம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களைக் கரைத்து, உடலை ஸ்லிம்மாகவும், ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ள உதவும் என்பதும் தெரிந்த விஷயமே.

எனவே உடல் எடை மற்றும் அழகைப் பராமரிப்பதற்கு எலுமிச்சை ஜூஸை மட்டும் குடிக்காமல், உண்ணும் உணவிலும் எலுமிச்சையைப் பயன்படுத்து நல்ல பலனைத் தரும்.

எலுமிச்சை டயட் மேற்கொள்ளும் போது திட உணவுகளான அரிசி அல்லது கோதுமையால் செய்யப்படும் உணவுகளை சிறிது நாட்கள் அதிகம் சாப்பிடக் கூடாது.

இதே போன்று கார உணவுகளையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் கார உணவுகள் உடலில் டாக்ஸின்களின் அளவை அதிகரிப்பதோடு, செரிமான மண்டலத்தையும் பாதிக்கும்.


காலை உணவு

எலுமிச்சை டயட்டை மேற்கொள்பவர்களுக்கு லெமன் பேன்கேக் ஒரு சிறந்த காலை உணவு. இதனால் வயிறு நிறைந்திருப்பதோடு நல்ல சுவையாகவும், உடல் எடையைக் குறைக்கக்கூடிய உணவாகவும் இருக்கும்.


எலுமிச்சை - தேன்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸில், தேன் சேர்த்து குடித்து வந்தால் உடலில் உள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறி, உடல் எடை விரைவில் குறையும்.


எலுமிச்சை ஜூஸ்

ஒரு நாளைக்கு அவ்வப்போது எலுமிச்சை ஜூஸை குடித்தால் உடல் வறட்சி நீங்கி, நச்சுக்கள் வெளியேறி, அடிக்கடி பசி ஏற்படுவதும் தடைப்படும். குறிப்பாக எடை குறைக்க நினைப்போர், ஜூஸில் சர்க்கரை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.


லெமன் பை [Lemon Pie]

டயட்டில் இருப்பவர்கள், நிச்சயம் க்ரீம் உள்ள உணவுப் பொருட்களை அறவே தொடக்கூடாது. குறிப்பாக செயற்கை இனிப்புக்களைப் பயன்படுத்தி செய்தவற்றை சாப்பிட்டால், இரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்து, உடலில் கொழுப்புக்களும் அதிகரிக்கும். எனவே இத்தகைய க்ரீம்களை சாப்பிடுவதற்கு பதிலாக லெமன் பை சாப்பிடுவது சிறந்தது.


எலுமிச்சை சூப்

எடையை குறைக்க நினைக்கும் போது அதிகப்படியான நீர்பானங்களை குடிக்க வேண்டியிருக்கும், அதற்காக எப்போதுமே ஜூஸ் குடிக்க முடியாது. ஆகவே அப்போது அதற்கு பதிலாக சூடான எலுமிச்சை சூப் சாப்பிட்டால், புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, உடல் எடையும் குறையும்.
Read More
// // Leave a Comment

ஏலக்காய்


ஏலக்காய் ஒரு இயற்கை மருந்து என்பது நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம்,‘‘வாசனைப் பொருட்களின் ராணி’’ [Queen of the spices] என்ற செல்லப் பெயரும் ஏலக்காய்க்கு உள்ளது.

ஏலக்காய் விதையில் புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, சோடியம், வைட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை அடங்கியுள்ளன.

ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின்,
சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன.

* சிறிது ஏலப்பொடியை, வெற்றிலையுடன் மென்று தின்றால், அஜீரணம் அகலும். பசி ருசி உண்டாகும்.

* ஏலப்பொடியுடன், மிளகுப்பொடி சேர்த்து, சிறிது துளசிச்சாறில் சேர்த்துக் குடித்தால், கடும் கபம் இளகி வெளிப்பட்டு, நலம் உண்டாகும். பக்க விளைவு இல்லாத இயற்கை மருந்து இது.

* ஏலக்காய் தூள், டீ தூள் இரண்டையும் சேர்த்து டீ தயாரித்து அத்துடன் தேன் சேர்த்து, தினம் இருவேளை பருகி வர, நரம்புகள் வலுப்படும்.

* தேனுடன், ஏலக்காய்தூள் கலந்து, சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி நீங்கும். நரம்புகள் நன்கு இயங்கும். வலிமை அடையும்.

* ஏலக்காயுடன், கறிவேப்பிலை வைத்து மைய்யாக அரைத்து எருமைத் தயிரில் சேர்த்து மூன்று வேளை சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

* ஏலக்காய் விதைகளை வாயிலிட்டு அடக்கிக் கொண்டு, உமிழ்நீரை விழுங்கிவர, வாய்நாற்றம் மாறும்.

* நான்கு மிளகு, சிறிது ஏலக்காய், சுக்கு இவைகளுடன் பால் தெளித்து விழுதாக அரைத்து, நெற்றியில் பற்றிட தலை வலிதானே போகும்.

* ஏலக்காய், மிளகு, சுக்கு, திப்பிலி, தனியா இந்த ஐந்தையும் சேர்த்து கஷாயம் செய்து பருகிவர குற்றிருமல் குணமாகும்.

* வெந்தயத்தை ஊற வைத்து எடுத்து சிறிது ஏலக்காய்ச் சேர்த்து மென்று தின்றால் வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

* சிறிது ஏலக்காயுடன் வேப்பிலை மஞ்சள் வைத்து அரைத்து பித்த வெடிப்பு மீது பூசிவர, விரைவில் வெடிப்பு குணமாகும்.

* ஏலக்காயுடன், அதிமதுரம், மிளகு போட்டு கொதிக்க வைத்த நீரை வடிகட்டி பருகினால், வாந்தி, குமட்டல் உடனே நிற்கும்.

* சுக்கு, ஏலக்காய், கிராம்பு இவைகளுடன் சிறிது நீர் தெளித்து மைய அரைத்து, சூடாக்கி கை, கால் மூட்டுகளின் மீது பூசி வர, மூட்டுவலி குணமாகும். ஆரம்பநிலை வாதம் நீங்கும்.

* ஏலப்பொடி, சீரகப்பொடி, மல்லிப்பொடி இவைகளுடன், சிறிது கருப்பட்டி பொடித்திட்டு கலந்து, ஒரு நெல்லிக்காய் அளவு வீதம் காலை மாலை தின்றுவர, பித்த கிறுகிறுப்பு மாறும்.

* திராட்சைச்சாறுடன், ஏலக்காய்த்தூள் கலந்து சாப்பிட்டுவர, நரம்புத்தளர்ச்சி நீங்கும். நரம்புகள் வலுப்பெறும்.

* ஏலக்காய்தூள், சுக்குப்பொடி, மிளகுப்பொடி இவைகளை தேனில் கலந்து சாப்பிட்டுவர, தசைபிடிப்புகள் நீங்கும்.

* செவ்வாழைப்பழத்துடன், சிறிது ஏலக்காய்தூள் சேர்த்துச் சாப்பிட்டால் மாதவிடாய்க் கோளாறுகள் ஒழுங்குபடும்.

* வெல்லத்தைப் பொடித்து நீரில் கலந்து, அத்துடன், எலுமிச்சைச்சாறு, ஏலக்காய் தூள் சேர்த்து பானம் தயாரித்து பருகினால் கோடைத்தாகம் நீங்கும். உடல் குளிர்ச்சி அடையும். சோர்வு மாறி புத்துணர்ச்சி ஏற்படும்.

* ஏலக்காயின் முக்கியமான பயன் என்னவென்றால். சூரிய வெப்பத்தால், உடலில் வெப்பம் அதிகம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். மேலும் பக்கவாதம் வராது. அதிலும் வெளியே செல்லும் போது ஏலக்காயை வாயில் போட்டு மென்று சென்றால், வெப்ப அலைகள் உடலை தாக்காமல் பார்த்துக் கொள்ளும்.
Read More
// // Leave a Comment

கொள்ளு கஞ்சி


அந்த காலத்தில் ஆயுட்காலம் அதிக நாட்கள் நீடித்ததற்கு தானியங்களும் ஒருவகை காரணம் என்று சொல்லலாம்.

ஆனால் இப்போது, தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வதே இல்லை. இதோ சத்தான கொள்ளு- பார்லி கஞ்சி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.



என்னென்ன தேவை?

வறுத்துப் பொடித்த கொள்ளு,

வறுத்துப் பொடித்த பார்லி மாவு (இவை இரண்டையும் மொத்தமாக தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்).

சீரகத்தூள் - 1 சிட்டிகை,

மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை,

உப்பு - ஒரு சிட்டிகை.


எப்படிச் செய்வது?


கொள்ளுமாவின் அளவில் 1/2 பங்கு பார்லி மாவு, மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கி கஞ்சி காய்ச்சவும். தனமும் பருகுவதால் உடல் உறுதி பெறும். கெட்டநீர் முழுவதும் வெளியேறும். ஊளைச்சதை கரையும். உடல் சிக்கென்று கட்டுக்கோப்பாக இருக்கும்.
Read More
// // Leave a Comment

சுண்டைக்காய்


சுண்டைக்காய், கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என்று கசப்புடனும் கசப்பின்றியும்கிடைக்கின்றது. சுகசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு
மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளுக்கு நல்ல மருந்து. ஒரு குடும்பத்தினருக்கு (5 பேர் அடங்கியது) வருடத்திற்கு 2 லிட்டர் கசப்பு சுண்டைக்காய் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, கிருமித் தொந்தரவு இருக்காது.

அமிபீயாஸிஸ் போன்ற கிருமிகளையும் சுண்டைக்காய் விரட்டி விடும். நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் சுண்டைக்காய் கிருமிகளை ஒழிக்கும் சுண்டைக்காய் நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது. சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை.

கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது. சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம். சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும். சுண்டைக் காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்கள் இவற்றை போக்கும்.

மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும். சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும்.

மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். சுண்டைக்காயுடன், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வருவது நல்லது. முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம்.

இது மார்புச்சளியைப் போக்கும். குடலில் உள்ள அசடுகளை நீக்கும். சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.

சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும்.

இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.
Read More
// // Leave a Comment

அவரைக்காய்


ரத்தத்தை சுத்தப்படுத்தும் அவரைக்காய்


வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் அவரைக்காய் அரிய வகை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாகச் சேர்க்கப்படுகிறது.

நல்ல சுவையைக் கொண்டது. எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும்.


உடலுக்கு வலிமை

அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் வலுப்பெறும்.

நோய்க்கு மருந்துண்ணும் காலங்களிலும், விரதம் இருக்கும் காலங்களிலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். இது உடலுக்கு வலுவைக் கொடுப்பதுடன் விரத மன அமைதியைப் பெருக்கவும் உதவும். சிந்தனையைத் தெளிவுபடுத்தும்.

பித்தத்தினால் உண்டாகும் கண்சூடு, கண்பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் சிறந்த மருந்தாகும். அவரைப்பிஞ்சினை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து கண் நரம்புகள் குளிர்ச்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.


ரத்தத்தை சுத்தமாக்கும்

அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

அதீத சிந்தனை, கோபம், எரிச்சல், இவற்றைப் போக்கும். உடலுக்கும், மனதிற்கும் சாந்தத்தைக் கொடுக்க வல்லது.


நீரிழிவை குணமாக்கும்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை கட்டுப்படும்.

மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும். மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. சிறுநீரைப் பெருக்கும். சளி, இருமலைப் போக்கும்.


சரும நோய்களை குணமாக்கும்
முதுமையில் உண்டாகும் நோயின் தன்மையை அவரைப் பிஞ்சு மாற்றும். தசை நார்களை வலுப்படுத்தும். உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும். இரவு உணவில் அவரைக்காய் சேர்த்துக் கொண்டால் சுகமான நித்திரை கிடைக்கும்.

முற்றிய அவரைக்காயை உணவாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக முற்றிய அவரைக்காய், முற்றிய வெண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால் உடல் பலமடையும். ஆண்மை சக்தி அதிகரிக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.
Read More
// // Leave a Comment

மூலம் நோய்கள் நீங்க


முளைக்கீரை, துத்திக்கீரை இரண்டையும் சம அளவு எடுத்து, சிறுபருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் உள் மூலம், பௌத்திரக் கட்டி, இரத்த மூலம் போன்றவை சரியாகும்.

பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சிறுபருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் மூலச்சூடு, மூலக்கடுப்பு ஆகியவை தீரும்.

அகத்திக்கீரை சாற்றில் 5 கடுக்காய்களை உடைத்துப்போட்டு கஷாயம் தயாரித்து, அதை வாய் அகன்ற பாத்திரத்தில் ஊற்றி சுமார் அரை மணி நேரம் ஆசனக் குளியல் செய்தால், மூலக்கிருமிகள், மூல எரிச்சல், மூலச்சூடு, இரத்த மூலம் போன்றவை முழுமையாக குணமாகும்.

வெங்காயத்தாள், பொடுதலை, வெந்தயம் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த மூலம், பௌத்திரக் கட்டி போன்றவை குணமாகும்.

முடக்கத்தான் கீரையுடன் 2 கடுக்காயைத் தட்டிப்போட்டு கஷாயமாக்கிச் சாப்பிட்டால் மூல நோய்கள் குணமாகும்.

கானாம்வாழைக் கீரையையும் துத்தி இலையையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த மூலம் குணமாகும்.

துத்திக் கீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக் கட்டினால், மூல நோயில் உண்டாகும் பௌத்திரக் கட்டி குணமாகும்.

புளியாரைக் கீரைச் சாறில் துத்தி இலையை சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த மூலம் சரியாகும்.

சுக்காங் கீரைச் சாறில் கடுக்காய் தோலை ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் மூல நோய்கள், குடற்புண்கள் குணமாகும்.

சுக்காங் கீரை, துத்திக் கீரை இரண்டையும் சம அளவு எடுத்துப் பாலில் கலந்து சாப்பிட்டால் இரத்த மூலம் உடனே தீரும்.

பண்ணைக் கீரைச் சாறில் நாவல் பருப்பை அரைத்துச் சாப்பிட்டால் இரத்த மூலம் உடனே குணமாகும்.

பாற்சொரிக் கீரைச், துத்திக்கீரை இரண்டையும் அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டால் மூல நோய்கள் குணமாகும்.

பாற்சொரிக் கீரைச் சாறில் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த மூலம் குணமாகும்.

Read More

Monday, September 22, 2014

// // Leave a Comment

எருக்குச் செடியின் மருத்துவ குணங்கள்


நாம் அவ்வளவாகக் கண்டுகொள்ளாத எருக்கஞ்செடி, பல இடங்களில் காணப்படுகிறது. பார்ப்பதற்குச் சாதாரணமாகத் தோன்றினாலும் பல்வேறு மருத்துவக் குணங்கள் கொண்டது எருக்கு. அவை பற்றி...

எருக்கின் இலை, பூ, வேர், பால் அனைத்தும் சிறப்பான மருத்துவ குணங்கள் நிறைந்தவை. எருக்கம் இலையை வதக்கிக் கட்ட, கட்டிகள் பழுத்து உடையும். செங்கல்லைப் பழுக்கக் காய்ச்சி அதன் மீது எருக்கின் பழுத்த இலையை 4-5 வரிசை அடுக்கிக் குதிகாலால் அழுத்தி மிதித்து வர குதிகால் வாயு நீங்கும்.

இலைகளைக் காய வைத்து எரித்து, அதிலிருந்து வரும் புகையை மூக்கினுள், இழுக்க, ஆஸ்துமா இருமல் போன்ற உபாதைகள் குறைந்துவிடும்....

இலையை வாட்டி வதக்கிப் பிழிந்தெடுத்த சாறு, மூக்கினுள் 4- 6 சொட்டுகள் விட, உள்ளே அடைபட்டிருக்கும் கெட்டியான சளி கரைந்துவிடும். இதைக் காலையிலும், மாலையிலும் அளவுமிகாமல் கவனத்துடன் விட, தும்மலை ஏற்படுத்தி, மூக்கடைப்பை நீக்கிவிடும்.

பழுத்த இலைகளின் சாற்றை, நல்லெண்ணெய்யுடன் கலந்து, வெதுவெதுப்பாக காதினுள் விட்டுவர காதுவலி, செவிடு போன்ற காது சம்பந்தப்பட்டப் பிரச்னைகள் விரைவில் குணமாக வாய்ப்பிருக்கிறது.

இலைகளை மூட்டை கட்டி, சூடாக்கி, வெதுவெதுப்பாக நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் ஒத்தடம் கொடுத்தால் அங்கு ஏற்படும் வலி குறைந்துவிடும்.

காய்ந்த இலைகளைப் பொடித்து, புண்கள் மீது தூவ, அவை விரைவில் ஆறிவிடும். இலைச்சாறு மஞ்சள் தூளுடன் கலந்து கடுகெண்ணெய்யில் வேக வைத்து, தோலில் ஏற்படும் படை, சொறி, சிரங்குகளில் பூசி வர, விரைவில் குணமாகும்.

இலைகளையும்,பூக்களையும் ஒன்றாக வேக வைத்த தண்ணீரை GUINEA WORMA எனும் புழுக்களை ஒழிக்க, அது பாதித்துள்ள கை,கால் பகுதிகளை முக்கி வைக்கலாம். ஆசனவாய் வழியாகச் செலுத்திக் குடலையும் சுத்தப்படுத்தலாம்.

எருக்கம் பூக்களைப் பொடித்து கருங்காலிக் கட்டை போட்டு வெந்தெடுத்த தண்ணீரில் சிட்டிகை கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட, குஷ்டம் எனும் கொடிய நோயின் தாக்கம் குறைந்துவிடும்.

எருக்கம் பூ நன்கு ஜீரண சக்தியை ஏற்படுத் தக்கூடியது. இருமல், சளி அடைப்பினால் ஏற்படும் மூச்சிரைப்பு நோய், பிறப்பு உறுப்புகளைத் தாக்கும் சிபிலிஸ், கொனோரியோ போன்ற உபாதைகளைக் குணப்படுத்தும். காலரா உபாதையில் இதன் பயன்பாடு நல்ல பலனைத் தருகிறது.

எருக்கம் வேர்த் தோலை விழுதாக வெந்நீருடன் அரைத்துச் சாப்பிட, உடல் உட்புறக் கொழுப்புகளை அகற்றி, வியர்வையைப் பெருக்கும். அதிக அளவில் சாப்பிட்டால் வாந்தியை ஏற்படுத்தும். வேர்த்தோலை அரிசி வடித்த கஞ்சியுடன் அரைத்து யானைக்கால் நோயில் பற்றிடலாம்..

தேள் கடித்த இடத்தில் எருக்கின் பாலைத் தடவி வர உடனே குறையும். பாம்புக் கடியிலும் இதைப் போலவே பயன்படுத்தலாம்.

மஞ்சள் தூளுடன் எருக்கம்பாலைக் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள், நிறமாற்றம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் பூசி வருவது நல்லது.

எருக்கு இலைச்சாறு 3 துளி, 10 துளி தேனில் கலந்துகொடுக்க, வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.

எருக்கம் வேரைக் கரியாக்கிப் பொடித்து விளக்கெண்ணெய் கலந்து மேற்பூச்சாகப் பயன்படுத்தினால் கரப்பான், பால்வினை நோய் புண்கள், ஆறாத காயங்கள் தீரும். மருத்துவர்களின் ஆலோசனைகளின் பேரில் இந்த மருத்துவ முறைகளை பின்பற்ற வேண்டும்.
Read More
// // Leave a Comment

இருமல்


கற்பூரவள்ளி இலையின் சாற்றை சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், குழந்தைகளின் கபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேனில் குழைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை அனைவரும் செய்யலாம்.

வெங்காயம் 150 கிராம், சர்க்கரை 150 கிராம் எடுத்து வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். பிறகு அதை மெல்லிய துணியில் வடிகட்டவும். இந்த வெங்காயச் சாற்றில் சர்க்கரையைச் சேர்த்து பாகுபதமாகக் காய்ச்சி இறக்கவும். இந்த வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி உட்கொண்டால் எப்பேர்ப்பட்ட இருமலும் சரியாகும்.


தொடர்ச்சியான இருமல்

இருமல் தொடர்ந்து ஏற்பட்டு தொல்ல அளிக்கும்போது, பத்து கிராம் சிற்றரத்தையை உடைத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் நீர்விட்டு பாதியாகச் சுண்டுமளவு கஷாயமாக்கிக்கொண்டு அதில் இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து, அத்துடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாற்றை கலந்து உள்ளுக்குக் கொடுத்து வந்தால் குணமாகும்.


சிற்றிருமல்

நீங்கள் நன்றாகக் காய்ச்சிய பசும் பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளுடன் சிறிது மிளகுத்தூளையும் சேர்த்துக் கலக்கி அருந்த இருமல் தணியும்.


இரைப்பு இருமல்

இஞ்சிச் சாறு, ஈர வெங்காயச் சாறு, எலுமிச்சம்பழச்சாறு இவைகளை சம அளவு எடுத்து வேளைக்கு ஒரு தேக்கரண்டி அளவு மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரைப்பு இருமல் சாந்தியாகும். இருமல் அதிகமாயிருந்தால் ஒரு நாளைக்கு இரு வேளை சாப்பிடலாம்.


கோழை இருமல்

நாய் துளசியைக் கொண்டு வந்து தினம் கொஞ்சம் சாப்பிட்டு வந்தால் கோழை இருமல் போன்ற குறைகளை அகற்றும். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல போஷாக்கு பெறும்.


வறட்டு இருமல்

வறட்டு இருமல் ஏற்பட்டிருந்தால், ஆழாக்களவு பசும்பாலுடன் அரைத் தேக்கரண்டியளவு மிளகை உடைத்துப் போட்டுக் கொதி வரும் வரைக் கொதிக்க வைத்து, இறக்கி வடிகட்டி, சிறிதளவு பனங்கற்கண்டையும் சேர்த்துக் கலக்கிப் படுக்கப் போகுமுன் குடித்துவிட வேண்டும். இது போல மூன்று நாள் சாப்பிட்டால் போதும், வறட்டு இருமல் குணமாகும்.


உடல் சூட்டினால் இருமல்

உடல் சூட்டினால் ஏற்படும் இருமலைத்தான் இந்த மருத்துவம் கண்டிக்கும். மிளகுத் தூளையும் பனை வெல்லத்தையும் சேர்த்துப் பிசைந்து வைத்துக்கொண்டு ஒரு சுண்டைக்காய் அளவு உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால், இரண்டொரு நாட்களில் சூட்டு இருமல் சரியாகும்.


எந்த வகையான இருமலுக்கும்

பொதுவாக எந்த வகையான இருமலையும் சீரகம் குணப்படுத்திவிடும். 10 கிராம் சீரகத்தைச் சுத்தம் பார்த்து அதை இலேசாக வறுத்து எடுத்து அம்மியில் வைத்துத் தூள் செய்து அது எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவு கற்கண்டைத் தூள் செய்து அத்துடன் கலந்து, ஒரு சீசாவில் வைத்துக்கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டியளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க ஐந்தே நாளில் இருமல் குணமாகும்.


கக்குவான் இருமல்

கக்குவான் இருமலின்போது வெள்ளைப் பூண்டை உரித்து அதை நெய்யில் வதக்கி வைத்துக்கொண்டு சாதத்துடன் சுமார் இரண்டு கிராம் எடை வீதம் சேர்த்துக் கொடுத்து வந்தால் கக்குவான் இருமல் குணமாகும்.


ஜலதோஷம் காரணமாக இருமல்

ஜலதோஷம் காரணமாக இருமல் ஏற்பட்டிருந்தால் ஒரு சுத்தமான சட்டியை அடுப்பில் வைத்து சட்டியைக் காயவிட்டு அதில் இரண்டு தேக்கரண்டியளவு மிளகைப் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு வறுபட்டு சிவந்து வருகி, அதில் தீப்பொறி பறக்கும் சமயம் ஆழாக்குத் தண்ணீரை அதில் விட்டு மூடி நன்றாகக் கொதிக்க விட வேண்டும். கொதித்தபின் இறக்கி அதில் பாதியை மட்டும் ஒரு டம்ளரில் இறுத்துக்கொண்டு, அதில் தேவையான அளவு சர்க்கரைச் சேர்த்துக் காலையில் குடித்துவிட வேண்டும். மறுபகுதியை மிளகுடன் வைத்திருந்து மாலையில் குடித்துவிட வேண்டும். இருமல் குணமாகும்.
Read More
// // Leave a Comment

கோதுமை - கீரை அடை


தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 200 கிராம்
அரிசி மாவு - 100 கிராம்
உளுத்தம் மாவு - 100 கிராம்
முருங்கைக்கீரை - 100 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 4
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை :

வெங்காயம், காய்ந்த மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, உளுத்தம் மாவு ஆகிய மூன்றையும் சேர்த்து அதில் வெங்காயம், காய்ந்த மிளகாய், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவு பதத்திற்கு கலந்து வைத்து கொள்ளவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் நன்றாக காய்ந்ததும் கலந்த மாவை உருண்டைகளாக உருட்டி தோசை கல்லில் போட்டு அடை பக்குவத்தில் தட்டவும்.

சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

இப்போது சத்தான சுவையான கோதுமை - கீரை அடை ரெடி.
Read More
// // Leave a Comment

30 வகை அடை

21. ராஜ்மா அடை


தேவையானவை:

புழுங்கல் அரிசி - ஒரு கப், ராஜ்மா - அரை கப், இஞ்சி - சிறு துண்டு, பாசிப்பருப்பு - ஒரு கப், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், பச்சை வேர்க்கடலை - ஒரு கப், மிளகு - 2 டேபிஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - ஒரு கிண்ணம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அரிசியுடன் ராஜ்மா சேர்த்து ஊற வைக்கவும். ஊறியதும், தண்ணீர் வடித்து இஞ்சி, மிளகு சேர்த்து அரைக்கவும். பாசிப்பருப்பு, வேர்க்கடலை, உளுத்தம்பருப்பையும் ஊறவைத்து தனியாக அரைத்து எல்லா மாவையும் சேர்த்துக் கலக்கவும். உப்பு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலந்து கல் காய்ந்ததும், மிதமான தீயில் அடை தட்டி, வெந்ததும் எடுக்கவும். மிகவும் சத்து நிறைந்தது இந்த ராஜ்மா அடை.


22. முடக்கத்தான் கீரை அடை


தேவையானவை:

புழுங்கல் அரிசி - ஒரு கப், பச்சரிசி - அரை கப், வெந்தயம் - 2 டேபிள்ஸ்பூன், கொடியாக இருக்கும் முடக்கத்தான் கீரை - ஒரு கைப்பிடி, இஞ்சி - சிறு துண்டு, பெருங்காயத்தூள் - சிறிது, பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

புழுங்கல் அரிசி, பச்சரிசி பாசிப்பருப்பு, வெந்தயம் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி இஞ்சி சேர்த்து அரைக்கவும். சிறிது மசியும்போது முடக்கத்தான் கீரையை ஆய்ந்து நறுக்கி மாவுடன் சேர்த்து அரைக்கவும். எல்லா மாவையும் சேர்த்து கலந்து உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும். கல் காய்ந்ததும் மிதமான தீயில் அடையை வார்த்து இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.


23. கேழ்வரகு அடை


தேவையானவை:

கேழ்வரகு, புழுங்கல் அரிசி - தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு, மிளகு - 2 டேபிள்ஸ்பூன் (ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்), தேங்காய் - 2 துண்டுகள் (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), காய்ந்த மிளகாய் - 4, புதினா - ஒரு கைப்பிடி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கேழ்வரகை கல் நீக்கி அரிசியுடன் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். பிறகு களைந்து காய்ந்த மிளகாய் சேர்த்து அடைமாவு பதத்தில் அரைக்கவும். இதில் தேங்காய் துண்டுகள், இஞ்சி, மிளகு சேர்க்கவும். புதினாவை பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கிப் போடவும். தேவையான உப்பு சேர்த்து கலந்து அடை தட்டி, இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும். உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ற அடை.


24. சாபுதானா அடை
 

தேவையானவை:

புழுங்கல் அரிசி - ஒரு கப், நைலான் ஜவ்வரிசி - அரை கப், காரட் துருவல் - ஒரு கப், குடமிளகாய் - 1, பாசிப்பருப்பு, துவரம் பருப்பு - தலா ஒரு கப், முளைகட்டிய கொள்ளு - ஒரு கப், இஞ்சி - சிறு துண்டு, மிளகு - 2 டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் - இரண்டு, எலுமிச்சம்பழம் - 1, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

ஊற வைத்த புழுங்கல் அரிசியுடன் இஞ்சி, மிளகு, பச்சைமிளகாய் சேர்த்து அரைக்கவும். ஜவ்வரிசியை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு அரை மணி நேரம் ஊற விடவும். தண்ணீரை உறிஞ்சி பொல பொல வென்று ஆகிவிடும். பாசிப்பருப்பு, துவரம் பருப்பு, தனியாக ஊற விடவும். ஊறிய பருப்புவகைகளுடன், முளைகட்டிய கொள்ளு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். எல்லா மாவையும் ஒன்றாக கலந்து தேவையான உப்பு சேர்த்து, கல் காய்ந்ததும் மிதமான தீயில் அடை மாவை ஊற்றி இருபுறமும் எண்ணை விட்டு, எடுப்பதற்கு முன், குடமிளகாயைப் பொடியாக நறுக்கி, காரட் துருவலுடன் சேர்த்து கலந்து ஜவ்வரிசியுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து (புளிப்புக்கு தகுந்தாற்போல்) அடையின் மேல் தூவி ஒரு நிமிடம் வைத்து எடுக்கவும். கலர்ஃபுல் கலக்கல் அடை இது!


25. மாங்காய் இஞ்சி மாகாணி அடை
 

தேவையானவை:

புழுங்கல் அரிசி - ஒரு கப், மாங்காய் இஞ்சி - 4, மாகாணிக்கிழங்கு - 2, இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 4 பல், காய்ந்த மிளகாய் - 2, முளைகட்டிய கொண்டைக்கடலை - ஒரு கப், பாசிப்பருப்பு - அரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அரிசியையும், பாசிப்பருப்பையும் தனித் தனியே ஒரு மணி நேரம் ஊற விடவும். மாங்காய் இஞ்சியை தோல் சீவிக் கொள்ளவும். மாகாணிக்கிழங்கை தண்ணீரில் ஒரு மணி நேரம் போட்டு தோல் சீவி பொடியாக நறுக்கவும். ஊற வைத்த அரிசி, பருப்பு, கொண்டைக்கடலை, மாகாணித்துண்டுகள், இஞ்சி, மாங்காய் இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து கலந்து அடை பதத்துக்கு அரைத்து தேவையான உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். கல் காய்ந்ததும், மிதமான தீயில் அடை தட்டி இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும். எளிதில் ஜீரணமாகும் அடை இது.


26. நோன்பு அடை


தேவையானவை:

பச்சரிசி - ஒரு கப், காராமணி - 4 டேபிள்ஸ்பூன், இஞ்சி - சிறு துண்டு, பச்சைமிளகாய் -1, கடுகு - 1 டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு கப், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பச்சரிசியை சிவக்க வறுத்து நைஸாக அரைத்து சலித்துக் கொள்ளவும். காராமணியை வறுத்து ஊற வைத்து குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும். பச்சைமிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஒரு பங்கு மாவுக்கு ஒரு பங்கு தண்ணீர் என்ற அளவில், தண்ணீர் கொதிக்கும்போது மாவை சிறிது சிறிதாக தூவி தேவையான உப்பு சேர்த்து கெட்டியாகக் கிளறவும். பிறகு, கடுகுடன் இஞ்சி சேர்த்து வதக்கி மாவில் போட்டு தேங்காய் துருவல், பெருங்காயத்தூள், வெந்த காராமணியை மாவில் போட்டு நன்கு பிசைந்து சிறு அடைகளாக தட்டி, இட்லி தட்டில் எண்ணெய் தடவி குக்கரில் வைத்து பத்து நிமிடம் வேக விட்டு எடுக்கவும்.


27. பெசரட் அடை
 

தேவையானவை:

புழுங்கல் அரிசி - ஒரு கப், பச்சரிசி - கால் கப், பாசிப்பருப்பு - முக்கால் கப், இஞ்சி - ஒரு துண்டு, காய்ந்த மிளகாய் - 2, தேங்காய்த்துருவல் - ஒரு கப், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

புழுங்கல் அரிசி, பச்சரிசி, பாசிப்பருப்பை சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து இஞ்சி, காய்ந்த மிளகாய், தேங்காய்த்துருவல் சேர்த்து அடைமாவை விட சற்று நைஸாக அரைத்துக் கொள்ளவும். பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கலக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும். பாசிப்பருப்பு மணத்துடன் பெசரட் அடை ருசியாக இருக்கும்.


28. முருங்கைக்கீரை அடை


தேவையானவை:

புழுங்கல் அரிசி - ஒரு கப், முருங்கைக்கீரை - அரை கப், மொச்சை - ஒரு கப், பாசிப்பருப்பு - அரை கப், இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 4 பல், காய்ந்த மிளகாய் - இரண்டு, முருங்கைப் பிஞ்சு - 10 (இளஞ்சிவப்பு கலரில் மெல்லிய கொடி போல இருக்கும்), பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், நெய் - தேவையான அளவு.

செய்முறை:

அரிசியை ஊற வைத்துக் கொள்ளவும். மொச்சை, பாசிப்பருப்பையும் சேர்த்து ஊற விடவும். ஊற வைத்த அரிசி, பருப்புடன், இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து அடைமாவு பதத்துக்கு அரைக்கவும். முருங்கைக்கீரை, முருங்கைப் பிஞ்சை பொடியாக நறுக்கி, சிறிது நெய்யில் வதக்கி மாவுடன் சேர்க்கவும். வெங்காயத்தைப் போட்டு மாவை நன்றாகக் கலந்து தேவையான உப்பு சேர்த்து கல் காய்ந்ததும் மிதமான தீயில் அடை தட்டி, இருபுறமும் நெய் விட்டு வெந்ததும் எடுக்கவும். முருங்கைப் பூவிலும் இந்த அடை செய்யலாம்.


29. வெள்ளரிக்காய் அடை


தேவையானவை:

புழுங்கல் அரிசி - ஒரு கப், முளைக்கட்டிய பாசிப்பயறு, கொண்டக்கடலை - தலா அரை கப், வெள்ளரிக்காய் தோல்சீவி பொடியாக நறுக்கியது - முக்கால் கப், காய்ந்த மிளகாய் - 4, இஞ்சி - சிறு துண்டு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிது, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

புழுங்கல் அரிசியை ஊற வைத்து, அதில் பாசிப்பயறு, கொண்டைக்கடலை, காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து அரைக்கவும். முக்கால் பங்கு அரைந்ததும், நறுக்கிய வெள்ளரிக்காயை மாவுடன் கலந்து உப்பு சேர்த்து அடைமாவு பதத்துக்கு அரைத்து நன்கு கலக்கவும். கறிவேப்பிலை சேர்த்து, கல் காய்ந்ததும், மிதமான தீயில் அடையை தட்டவும். இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும்.


30. கீரைக்கிழங்கு அடை
 

தேவையானவை:

புழுங்கல் அரிசி - ஒரு கப், பாசிப்பருப்பு, துவரம்பருப்பு - தலா அரை கப், சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1, ஆல்வள்ளிக் கிழங்கு - 1, பெரிய நெல்லிக்காய் - 3, நறுக்கிய முருங்கைக்கீரை - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 4, இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 4 பல், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

ஆல்வள்ளிக் கிழங்கையும் சர்க்கரைவள்ளிக் கிழங்கையும் வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். பாசிப்பருப்பு, துவரம்பருப்பை ஊற வைக்கவும். நெல்லிக்காயை சீவி கொட்டையை நீக்கவும். அரிசியை ஊற வைத்து களைந்து தண்ணீரை வடித்து, ஊற வைத்த பருப்பு, நெல்லிக்காய், வேக வைத்த கிழங்கு, இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து கரகரப்பாக அடைமாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும். முருங்கைக்கீரை, உப்பு சேர்த்து கலந்து, கல் காய்ந்ததும் அடை தட்டி எண்ணெய் விட்டு முறுகலாக வெந்ததும் எடுக்கவும். கீரை, கிழங்கு என மாறுபட்ட சுவையில் மணக்கும் இந்த அடை.

30 வகை அடை-01 | 30 வகை அடை-02 | 30 வகை அடை-03

Read More