Sunday, July 30, 2017

// // Leave a Comment

வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்


இப்போதெல்லாம் அனைவரின் வீட்டிலும் ஓர் மருத்துவர் இருக்கிறார்கள். அது பொதுவாக அப்பா அல்லது அம்மாவின் உருவத்தில் இருக்கிறார்கள். என்ன உடல் வலி என்றாலும் உடனேயே வாயில் நுழையாத வார்த்தையை கூறி ஒரு மாத்திரையை வாயில் போட்டு விடுவார்கள்.

சிலர், அவர்களது பர்ஸ் அல்லது கைப்பையில் எப்போதுமே இந்த வலிநிவாரண மாத்திரைகளை வைத்திருப்பார்கள். இதனால் அந்த நேரத்தில் வலி குறைந்தாலும் கூட இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது.


கல்லீரல் சேதம்

வலி நிவாரணி மாத்திரை உட்கொள்வதால் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் பெராக்சைடு கல்லீரல் சேதம் ஏற்படுகிறது. எட்டுக்கும் அதிகமான அளவில் வலி நிவாரணி மாத்திரைகள் உட்கொள்வதால் கல்லீரலில் மிகுதியான சேதம் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் மதுவருந்துவோர் கட்டாயம் வலி நிவாரணி மாத்திரையை உட்கொள்ள கூடாது.


வயிறு வலி, அல்சர்

இப்யூபுரூஃபன், ஆஸ்பிரின் மற்றும் நேப்ரோஜென் போன்ற வலி நிவாரணி மாத்திரைகளினால் ஏற்படும் எரிச்சலின் காரணமாக வயிறு வலி, அல்சர் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.


மன அழுத்தம்

வலி நிவாரண மாத்திரை உட்கொள்ளும் நபர்கள் மத்தியில் மன அழுத்தம் பாதிப்பு அதிகம் இருக்கிறது.


சிறுநீரக பாதிப்பு

மேலும் அதிகமாக வலிநிவாரணி மாத்திரை உட்கொள்வதால் சிறுநீரகம் பாதிப்படைகிறது. வலி நிவாரணி மாத்திரையால் ஏற்படும் நீரழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.


கருச்சிதைவு

கருவுற்ற முதல் இருபது வாரங்களில் வலிநிவாரணி மாத்திரை எடுத்துக் கொள்ளவே கூடாது, இதனால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.


வாயுத்தொல்லை

உங்களுக்கு தெரியுமா? உங்களுக்கு அடிக்கடி வாயுத்தொல்லை ஏற்படுவதற்கு வலிநிவாரணி மாத்திரையும் கூட ஓர் காரணமாக இருக்கிறது. மேலும் இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது
Read More

Tuesday, July 18, 2017

// // Leave a Comment

அப்பப்போ உங்க கண்ணுல புழு நெளியிற மாதிரி தெரியுதா? அது என்னனு தெரியுமா?


பல தடவை நீங்கள் இதை கண்டிருக்கலாம், சில சமயம் இது என்ன, ஏது, ஏன் தோன்றுகிறது என்ற சந்தேகங்களும் எழுந்திருக்கலாம். சிலர் இதை ஏதோ கோளாறு என்று கூட எண்ணி அச்சம் கொள்ளலாம்.

ஆம், உங்கள் கண்களில் சில சமயத்தில் ஏதோ நுண்ணிய புழுக்கள் போல நெளிவதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள், அது என்ன? ஏது? ஏன் இப்படி கண்களில் தோன்றுகிறது, எதனால் இது நடக்கிறது என்ற கேள்விகள் உங்கள் மனதில் எழுந்தால், இதோ அதற்கான பதில்...


முஸ்காய் வாளிடான்டஸ் [ Muscae Volitantes ]

உங்கள் கண்களில் அவ்வப்போது திடீரென ஏதோ நுண்ணிய புழு போல ஏதோ நெளிவது போல தெரியும். கண்களை கசக்கினாலோ, அல்லது பார்வையை வேறுபுறம் அகற்றினாலே அது சற்று நேரத்தில் மறைந்துவிடும். இதன் ஆப்ஜெக்ட்டின் பெயர் முஸ்காய் வாளிடான்டஸ்.


அசௌகரியம்

முஸ்காய் வாளிடான்டஸ்-ஐ ஃப்ளையிங் ஃப்ளைஸ் என்றும் குறிப்பிடுகின்றனர். இது கண்களில் தோன்றுவது மிகவும் இயல்பானது. இது ஏதோ கிருமி அல்லது நச்சு அல்ல. இது வெளிப்புற ஆர்கன் அல்ல. இது நமது கண்களின் உட்புறத்தில் இருக்கும் ஒன்று தான்.


உருவ மாற்றம்

இது உருவ மாற்றம் ஏற்படுத்திக் கொண்டிருப்பது போன்ற காட்சியளிக்கும். ஆனால், இவற்றுக்கு உயிரல்ல. கண்களுக்கு -பின்னால் லைட் சென்ஸிடிவ் திசுவாக இது இருக்கிறது.


இரத்தம், புரதம்

இதன் உருவாக்கம் ஒருவகையான திசு, இரத்த அணுக்கள் மற்றும் புரதம் கொண்டு உருவானதாய் அறியப்படுகிறது. இவை கண்களின் அசைவிற்கு ஏற்ப அங்கும், இங்கும் பவுன்ஸ் ஆகும் தன்மை கொண்டுள்ளன.


ரெட்டினா

ரெட்டினாவிற்கு தொலைவில் இருக்கும் போது இவை பெரிதாக அசௌகரியமாக தென்படாது. ஆனால், ரெட்டினாவிற்கு அருகில் செல்லும் போது கண்களுக்கு புலப்படும்.


நிலையான ஒளிமிக்க தளம்

மிக ஒளி மிகுந்த தளங்களில், எடுத்துக்காட்டாக கம்பியூட்டர் திரை, தெளிவான நீல வானம் போன்றவற்றை நீங்கள் கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் போது இது தென்படும்.


குட்டி, குட்டி ஒளி நட்சத்திரங்கள்

சில சமயங்களில் இதை போலவே, மிகுந்த ஒளியுடன் எதையாவது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது கண் முன்னே ஏதோ குட்டி, குட்டி ஒளி நட்சத்திரங்கள் போல தோன்றும். இவை ப்ளூ ஃபீல்ட் என்டோபிக் ஃபினாமெனன் (Blue Field Entopic Phenomenon) என அழைக்கப்படுகிறது.


நேரெதிர்

இவை முஸ்காய் வாளிடான்டஸ்-க்கு நேர் எதிரானவை என அறியப்படுகிறது. இதுவும், ஒளியின் மிகுதியான செயல்பாட்டின் போது வெள்ளை அணுக்களின் இடர்பாடுகள் காரணமாக கண்களுக்குள் உண்டாகும் ஒரு செயல் தான்.


மருத்துவ பரிசோதனை!


ஒருவேளை முஸ்காய் வாளிடான்டஸ் மிகப்பெரிய அளவில் தென்பட ஆரம்பித்தால் நீங்கள், மருத்துவரிடம் பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது. இது ஏதேனும் அபாயமாக கூட இருக்கலாம்.
Read More

Sunday, July 2, 2017

// // Leave a Comment

உயிருக்கு உத்தரவாதமில்லாத உடனடி உணவுகள் - [ அதிர்ச்சி தகவல் ]



கடைகளில் விற்பனை செய்யப்படும் உடனடி உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய், இதயநோய் வரும் வாய்ப்புகள் அதிகம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் இன்ஸ்டன்ட் உணவு சாப்பிட்ட மாணவர்கள் பெரும்பாலோனோர் இதயநோய், புற்றுநோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.


உடனடி உணவுகள்

சூப்பர்மார்க்கெட், மால்களில் உள்ள கடைகளில் பிரியாணி, சப்பாத்தி, புரோட்டா, இடியாப்பம், சட்னி, சாம்பார் உள்ளிட்ட பலவகை உணவு வகையராக்கள் பாக்கெட்டில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி வந்து சூடு படுத்தினால் போதும் பத்து நிமிடத்திற்குள் உணவு தயாராகிவிடும். இந்த உடனடி உணவுகளை அதிகம் வாங்குவது வேலைக்கு போகும் இல்லத்தரசிகளும், வெளியூர்களில் ரூம் எடுத்து வேலைபார்க்கும், படிப்பவர்களும்தான்.


வசீகரிக்கும் விளம்பரங்கள்

மளிகைச் சாமான்களால் நிரம்பியிருந்த பலரது வீடுகளில் இன்றைக்கு இன்ஸ்டன்ட் உணவுப் பொருட்கள் நிரம்பியுள்ளன. இது தவறான செயல் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். சமைக்க வேண்டாம் அப்படியே சாப்பிடலாம் என்ற வசீகர விளம்பரத்தில் மயங்கும் பெண்களும், இளம் தலைமுறையினரும் நேரமின்மையினால் இந்த உடனடி உணவுகளை வாங்கி ருசிக்கின்றனர். விளைவு சிறு வயதிலேயே மூளை பாதிப்பு, இதயநோய், புற்றுநோய் என பல பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்

உடனடி உணவுகளில் மறைந்திருக்கும் முதல் ஆபத்து கொழுப்பு. ‘டிரான்ஸ்ஃபேட்’ என்று சொல்லக் கூடிய இது, உணவுப்பொருள்கள் சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்க உதவும். இது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்து, அதன் விளைவாக இதய நோய்களுக்கு அஸ்திவாரம் போடும். குழந்தைப்பருவ பருமன், ஹைப்பர் டென்ஷன், மாரடைப்பு என பல நோய்களுக்கும் இது காரணமாகிறது என்று அதிர்ச்சியூட்டுகின்றனர் மருத்துவர்கள்.


சோடியம் உப்பு

உடனடி உணவுகளில் அதிக அளவு சோடியம் உப்பு சேர்க்கப்பட்டிருக்கும். ஆரோக்கியமாக இருக்கிறவங்களுக்கே இது ஆபத்தானது. ஏற்கனவே இதயக் கோளாறு இருக்கிறவங்க இந்த உணவுகளை சாப்பிடறப்ப, பிரச்னை இன்னும் தீவிரமாகும்.

நம் உடம்பில் உள்ள நீர்ச்சத்தை சரிவிகிதத்துல வைக்கவும், தசைகள் சுருங்கி விரியவும், ரத்த அழுத்தத்தை முறைப்படுத்தவும் சோடியம் தேவை. ஒருத்தருக்கு ஒரு நாளைக்கு ஆயிரத்து 500 மில்லி கிராம் அளவு சோடியம் போதுமானது. அந்த அளவைத் தாண்டும்போது ரத்த அழுத்தம் எகிறும். உடனடி உணவுகள்ல உப்பு அதிகமா சேர்க்கப்பட்டிருப்பதால் உயர் ரத்த நோய் ஏற்படும் பாதிப்பு அதிகம்.


அதிக இனிப்பு பொருள்

பர்கர் பன், குளிர்பானங்கள், கெட்ச்சப் போன்ற பல உணவுகளில் இனிப்புச் சுவைக்காக சேர்க்கப்படற பிரதான பொருள் ‘ஹை ஃப்ரக்டோஸ் கார்ன் சிரப்’. இது உணவுக்கு ஒருவித கவர்ச்சியான பிரவுன் நிறத்தையும் கொடுக்கக்கூடியது. இது, அதிகம் சாப்பிடத் தூண்டி, இதய நோய்களையும் நீரிழிவையும் வரவழைக்கக்கூடியது.


கெட்டுப்போகாமல் தடுப்பவை

உடனடி உணவுகள் கெடாமல் இருக்கவும், பாக்டீரியா வளராமல் இருக்கவும் சேர்க்கப்படும் ரசாயன பிரிசர்வேட்டிவ் ஆபத்தானது. உப்பு, சர்க்கரை, வினிகர் மாதிரியான இயற்கையான ப்ரிசர்வேட்டிவ்களால் பெரிய பாதிப்பு கிடையாது. ரசாயன பொருட்களான சோடியம் பென்ஸோயட்டுக்கு. ஊறுகாய், ஜூஸ் வகையறாக்களில் சேர்க்கப்படுவதால் இது அலர்ஜியை உருவாக்கி, மூளையையும் பாதிக்கலாம்.

அடுத்து உடனடியா சாப்பிடக் கூடிய அசைவ உணவுகளில் நைட்ரேட், நைட்ரைட்டஸ் சேர்க்கப்படுகிறது . இதனை தொடர்ந்து சாப்பிடும் போது வயிறு மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோயை வரவழைக்கக்கூடிய அளவுக்கு இது மோசமானது. ஏற்கனவே அசைவ உணவுகள்ல உள்ள கொழுப்பு, அதைக் கெடாம வச்சிருக்கறதுக்காக சேர்க்கிற இன்னொரு கொழுப்புன்னு ரெண்டுமே கெடுதல்தான் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.


அதிக கலோரி ஆபத்து

ரெடிமேட் உணவுகளில் கலோரி அதிகம் உள்ளது எனவே இவற்றை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுவது நிச்சயம் என்கின்றனர் மருத்துவர்கள். ஒருவேளை இன்ஸ்டன்ட் உணவுகளை எடுத்துக் கொண்டால் , மற்ற நேரங்களில் நிறைய பச்சைக் காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். நீரிழிவு, ஹைப்பர் டென்ஷன், இதய நோய், உடல் பருமன் உள்ளவங்க இதைத் தொட்டுக்கூட பார்க்க வேண்டாம் என்பதும் மருத்துவர்களின் எச்சரிக்கையாகும்
Read More