Tuesday, December 5, 2017

// // Leave a Comment

தாய்பால் அதிகம் சுரக்க உணவுகள்

தாய்பால் அதிகம் சுரக்க உணவுகள்
தாய்ப்பால் அதிகம் சுரக்க எந்த வகையான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும் என்று குழம்புவது இயல்பு. குழந்தை பிறந்த பின்பு குழந்தைகளுக்கு வழங்கப்படும் முதல் உணவு மற்றும் முக்கிய உணவாக இருப்பது தாய்ப்பால். குறைந்தது 6 மாதக் காலமாவது கண்டிப்பாக தாய்பாலை  கொடுக்க வேண்டும். இதுதான் குழந்தைகளுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி. இதை விட சிறந்த மருந்து வேறு எதுவும் இல்லை எனலாம்.

சிலருக்கு தாய்ப்பால் குறைவாக சுரக்கும். மனஅழுத்தம், தூக்கமின்மை, சத்துள்ள ஆகாரம் உட்கொள்ளாதது, உடல் வறட்சி என்று பல காரணங்கள் இருக்கும்.  தாய் என்ன சாப்பிடுகிறாரோ அதுதான் குழந்தைக்குச் சத்தாக சென்று சேரும். அதனால்  தாய்மார்கள் குழந்தைகளுக்காகவாவது சத்துள்ள உணவு பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு பொருட்கள் ஒரே சமயத்தில் எடுத்துக் கொள்ளலாமல் இடைவெளி விட்டு விட்டு எடுத்து கொள்வது நல்லது.

சில உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்வதின் மூலம் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். வாருங்கள் பார்க்கலாம்.

தினமும் முட்டை, மீண் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ளலாம். அசைவம் சாப்பிடதவர்கள் காய்கறிகள், பழங்கள் அதிகம் உணவில் எடுத்து கொள்ளலாம்.

பாதாம் பருப்பை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடலாம்.

அஸ்வகந்தி இலைத் துளிர்களைப் பறித்து எண்ணெயில் வதக்கி துவையல் செய்து சாப்பிட்டால் பால் சுரக்கும்.

பச்சை வேர்கடலை மென்று சாப்பிடலாம்.

ஆலம் விழுது, துளிர் விதை இவ்விரண்டையும் எடுத்து மைய அரைத்து, 5 கிராம் எடுத்து பசும்பாலில் கலந்து  காலையில் மட்டும் உட்கொண்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.

ஆல்வல்லி கிழங்கு வேக வைக்காமல் பச்சையாக மென்று தின்னலாம்.

பப்பாளிக் காய்யை தோல் நீக்கி கடலைப் பருப்புடன் சேர்த்துக் கூட்டாகச் சமைத்துண்டால் பால் பெருகும்.

துளசி இலைகளைப் புட்டு போல் அவித்துக் கசக்கி பிழிந்துச் சாற்றை தினமும் ஒரு ஸ்பூன் அளவு குடித்து வர தாய்ப்பால்  அதிகரிக்கும். இதயமும் பலமடையும்.

உணவில் பூண்டு, உளுந்து, பெருங்காயம், வெந்தயம், செவ்வாழைப் பழம், உருளைக் கிழங்கு  பயன்படுத்தப் பால் பெருகும்.

வெட்டிவேர் சர்பத் அருந்த தாய்ப்பால் பெருகும்.
Read More