Tuesday, September 23, 2014

// // Leave a Comment

கொள்ளு கஞ்சி


அந்த காலத்தில் ஆயுட்காலம் அதிக நாட்கள் நீடித்ததற்கு தானியங்களும் ஒருவகை காரணம் என்று சொல்லலாம்.

ஆனால் இப்போது, தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வதே இல்லை. இதோ சத்தான கொள்ளு- பார்லி கஞ்சி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.



என்னென்ன தேவை?

வறுத்துப் பொடித்த கொள்ளு,

வறுத்துப் பொடித்த பார்லி மாவு (இவை இரண்டையும் மொத்தமாக தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்).

சீரகத்தூள் - 1 சிட்டிகை,

மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை,

உப்பு - ஒரு சிட்டிகை.


எப்படிச் செய்வது?


கொள்ளுமாவின் அளவில் 1/2 பங்கு பார்லி மாவு, மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கி கஞ்சி காய்ச்சவும். தனமும் பருகுவதால் உடல் உறுதி பெறும். கெட்டநீர் முழுவதும் வெளியேறும். ஊளைச்சதை கரையும். உடல் சிக்கென்று கட்டுக்கோப்பாக இருக்கும்.

0 comments:

Post a Comment