Saturday, February 27, 2016

// // Leave a Comment

சுக்குமல்லி பானம் [அ] சுக்குக் காபி

வயிற்று கோளாறு, செரிமான பிரச்னைகள் போன்றவற்றை தீர்க்க கூடியதாக இந்த பானங்கள் உள்ளன. சுக்கு மல்லி பானம் தயாரிக்க தேவையான பொருட்கள்: சுக்கு பொடி, மல்லி விதைப்பொடி, நாட்டு சர்க்கரை, காய்ச்சிய பால். கால் ஸ்பூன் சுக்குப் பொடி, அரை மல்லி விதைப்பொடி, சிறிது நாட்டு சர்க்கரை சேர்க்கவும். இதில், ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும்.

இதனுடன் சிறிது பால் சேர்த்து குடிக்கலாம். இது உள் உறுப்புகளை தூண்டக் கூடியதாக உள்ளது. உடல் வலியை குறைக்கும். வயிற்று கோளாறுகளை சரிசெய்யும். பல்வேறு நன்மைகளை கொண்ட தனியா, சிறுநீரை வெளியேற்றும். உள் உறுப்புகளுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். காலையில் காபி, டீக்கு பதிலாக சுக்குமல்லி பானத்தை குடித்துவர செரிமான சக்தி அதிகரிக்கும். வயிற்று புண்கள் ஆறும். மலச்சிக்கல் இல்லாமல் போகும். அற்புதமான பானமாகவும், உடலுக்கு ஆரோக்கியம் தருவதாகவும் சுக்குமல்லி பானம் பயன்படுகிறது.

லவங்கம், மிளகு, சீரகத்தை பயன்படுத்தி கொழுப்பை குறைக்கும் பானம் தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: லவங்கப் பட்டை, லவங்கம், மிளகு, சீரகம், ஏலக்காய், பனங்கற்கண்டு. 5 முதல் 10 மிளகு, ஒரு துண்டு லவங்க பட்டை, ஒரு ஏலக்காய், 5 லவங்கம், கால் ஸ்பூன் சீரகம் ஆகியவற்றை லேசாக தட்டி எடுத்துக்கொள்ளவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து, ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி குடிப்பதால் உடல் எடை குறையும். உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும்.

ரத்த அழுத்தத்தை தடுக்கும். மணத்தை தரக்கூடியதாக உள்ள இந்த பானம் பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கும். எலுமிச்சை புல்லை பயன்படுத்தி உடல் வலியை போக்கும் பானம் தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: எலுமிச்சை புல், இஞ்சி, தேன்.எலுமிச்சை புல்லை துண்டுகளாக்கி எடுத்துக்கொள்ளவும். இதனுடன் இஞ்சியை தட்டி போடவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் சேர்த்து குடித்தால், ரத்தம் சுத்தமாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
Read More

Friday, February 26, 2016

// // Leave a Comment

மூலிகைப்பொடி - தீர்க்கும் நோய்கள்

1) அரச இலைப்பொடி - மலட்டுத்தன்மை நீங்க

2) அருகம்புல் பொடி - சகல வியாதிகள் நீங்க

3) ஆடாதொடைப் பொடி - ஆண்மைக்குறைவு நீங்க

4) வல்லாரை இலைப் பொடி - ஞாபக சக்தி பெருக

5) வில்வ இலைப் பொடி - சர்க்கரை வியாதி குறைய

6) துளசி இலைப் பொடி - ஈரல், சளி, இருமல் நீங்க

7) கல்யாண முருங்கைப் பொடி - பித்தம், நீரிழிவு நீங்க

8) தூதுவளை - புற்றுநோய், ஆஸ்துமா நீங்க

9) மணத்தக்காளி - புற்றுநோய், அல்சர் நீங்க

10) கீழாநெல்லி - மஞ்சள் காமாலை, கல்லீரல் நோய் நீங்க

11) முடக்கத்தான் இலைப்பொடி - மூட்டுவலி நீங்க

12) பாகற்காய் பொடி - ரத்த அழுத்தம், நீரிழிவு நீங்க

13) சுண்டைக்காய் பொடி - பூச்சிக்கொல்லி

14) கறிவேப்பிலைப் பொடி - இதயத்திற்கு இதமானது

15) நாரத்தங்காய் இலைப்பொடி - பித்தம் நிவாரணி

16) சுக்குப் பொடி - ஜீரண சக்தி ஏற்படல்

17) வெந்தயப் பொடி - சர்க்கரை வியாதி

18) சுக்குமல்லி காபி - ஜீரண சக்தி

19) புதினா பொடி - வயிற்றுவலி நீங்க


- இயற்கை மருத்துவம் நூலிலிருந்து
Read More
// // Leave a Comment

தேங்காய் தண்ணீர்

இளநீரின் நன்மைகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும்.

அதேபோல் தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்களைப் பற்றியும் பலரும் அறிந்திருப்பீர்கள்.

இப்போது நாம் பார்க்கப் போவது இளநீர் பற்றி அல்ல,

தேங்காய் தண்ணீரின் நன்மைகளைப் பற்றி தான்.

1) நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை பெறும் தேங்காய் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் நோயெதிர்பபு மண்டலம் வலிமைப் பெறுவதோடு, சிறுநீர் பாதை தொற்றுகள், ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மற்றும் காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ்களையும் தேங்காய் தண்ணீர் அழித்து வெளியேற்றிவிடும்.

2) தைராய்டு ஹார்மோன்கள் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து, தைராய்டு சுரப்பி சீராக செயல்பட வழிவகுக்கும்

3) சிறுநீரக பிரச்சனைகள் சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால், தேங்காய் தண்ணீரைக் குடித்து வருவதன் மூலம், சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்தலாம். மேலும் தேங்காய் தண்ணீர் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, சிறுநீரக கற்கள் இருந்தால், அவற்றைக் கரைத்துவிடவும் செய்யும்.

4) செரிமான பிரச்சனை செரிமான பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீரை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால், செரிமான பிரச்சனை நீங்குவதை நன்கு உணரலாம். ஏனெனில் தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளது. இவற்றை தெடர்ந்து குடித்து வந்தால், வாய்வு தொல்லையில் இருந்தும் விடுபடலாம்.

5) எடையைக் குறைக்கும் தேங்காய் தண்ணீரை எவ்வளவு குடித்தாலும், உடலில் கொழுப்புக்கள் சேராது. மேலும் இதனை குடித்தால், பசி கட்டுப்படும்.
இதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.

6) உயர் இரத்த அழுத்தம் உயர் இரத்த அழுத்தம் இருந்தால், தினமும் காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்தால், அவை உடலின் எலெக்ரோலைட்டுக்களை சீராக்கி, உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.

7) தலைவலி இரவில் அதிகமாக மது அருந்திவிட்டு, மறுநாள் காலையில் எழும் போது கடுமையான தலைவலியை உணரும் போது, தேங்காய் தண்ணீர் குடித்தால், தலைவலி நீங்குவதோடு, ஆல்கஹால் மூலம் உடல் வறட்சி அடைவது தடுக்கப்பட்டு, ஹேங்ஓவர் பிரச்சனை நீங்கும்.

8) நீர்ச்சத்து அதிகமாகும் தினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, நாள் முழுவதும் பொலிவான தோற்றத்துடனும், போதிய ஆற்றலுடனும் செயல்பட முடியும்.

9) கர்ப்பிணிகளுக்கு நல்லது கர்ப்பிணிகள் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்
Read More

Thursday, February 25, 2016

// // Leave a Comment

சளித் தொல்லை, ஜீரணசக்திக்கு மூலிகைப்பொடி

இந்த பொடி ஜீரணசக்தி, சளித்தொல்லை, தலைவலி, இருமல், உடல்வலி போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.

இதை சூடான சாதத்தில் போட்டு நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். இந்தப் பொடியில் சேர்க்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. கடுகு சளித் தொல்லையில் இருந்து நிவாரணம் அளிக்கும், சுக்கு ஜீரணசக்திக்கு நல்லது, வேப்பம்பூ பித்தத்தை தணிக்கும், கறிவேப்பிலை இரும்புச்சத்து மிகுந்தது, மிளகு ரத்த சுத்திகரிப்புக்கு உதவும், பெருங்காயம் வாயுத்தொல்லை நீக்கும்


இந்த பொடி செய்ய தேவையான பொருட்கள் :

சுக்கு - ஒரு சிறிய துண்டு,
சுண்டைக்காய் வற்றல் - 10,
வேப்பம்பூ, கறிவேப்பிலை - தலா ஒரு கைப்பிடி,
மிளகு - 2 டீஸ்பூன்,
கடுகு - 2 டீஸ்பூன்,
பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு,
உப்பு - தேவையான அளவு.


செய்முறை :

கடுகு, சுக்கு, சுண்டைக்காய் வற்றல், வேப்பம்பூ, கறிவேப்பிலை, மிளகு, பெருங்காயம் எல்லாவற்றையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும். இவற்றுடன் தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.


Read More

Wednesday, February 24, 2016

// // Leave a Comment

கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கான கண் பயிற்சிகள்

கம்ப்யூட்டர் திரையை நீண்ட நேரம் உற்று பார்த்து வேலை செய்வதால் பார்வை மங்குவது, கண் வலி, கண்களில் இருந்து நீர் வடிவது, கண் எரிச்சல் போன்றவை ஏற்படுகின்றன.

இவற்றைத் தவிர்க்க வேண்டுமானால், தினமும் கண்களுக்கு போதிய கண் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில எளிய கண் பயிற்சிகள் பார்க்கலாம். முதலில் அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும். தரையிலும் அமரலாம். நாற்காலியிலும் அமர்ந்து செய்யலாம். தினமும் கீழே உள்ள இந்த பயிற்சிகளை 30 செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம். அலுவலகத்தில் வேலையின் இடைவேளையில் கூட இந்த பயிற்சிகளை செய்து வரலாம்.
  • முதலில் கருவிழிகளை மேலும் கீழுமாக நகர்த்த வேண்டும். இப்படி 1 நிமிடம் செய்ய வேண்டும். பின் கண்களை ரிலாக்ஸ் செய்யவும். பின் கருவிழிகளை இடதுபுறம் வலதுபுறமாக நகர்த்த வேண்டும். இப்பயிற்சியை 1 நிமிடம் தொடர்ந்து செய்து, பின் சில நொடிகள் கண்களை ரிலாக்ஸ் செய்யவும்.
  • அடுத்து கருவிழிகளை குறுக்காக நகர்த்த வேண்டும். அதில் முதலில் வலதுபுறத்தில் இருந்து ஆரம்பித்து ஒரு நிமிடம் செய்ய வேண்டும். பின் சில நொடிகள் கண்களை ரிலாக்ஸ் செய்யயும். பின் இடதுபுறத்தில் இருந்து ஆரம்பித்து 1 நிமிடம் கருவிழிகளை குறுக்காக நகர்த்த வேண்டும். பின் கண்களை ரிலாக்ஸ் செய்ய வேண்டும்.
  • அடுத்து கருவிழிகளை இடதுபக்கம் நோக்கி 10 முறை வட்டமாக சுழற்ற வேண்டும். பின்பு சில நொடிகள் ரிலாக்ஸ் செய்யவும். பின் கருவிழிகளை வலது பக்கம் நோக்கி 10 முறை வட்டமாக சுழற்ற வேண்டும். பிறகு சில நொடிகள் ரிலாக்ஸ் செய்யவும்.
  • அருகில் உள்ள ஒரு பொருளையும், தொலைவில் உள்ள ஒரு பொருளையும் 1 நிமிடம் பார்க்க வேண்டும். இப்படி செய்த பின் சில நொடிகள் கண்களை ரிலாக்ஸ் செய்யவும்.
     
  • கண்களை மூடிக் கொண்டு கைவிரல்களால் கண்களுக்கு அழுத்தம் கொடுத்து 1 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.
இந்த பயிற்சிகளை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் கண்களின் அனைத்து பிரச்சனைகளும் தீரும். கம்ப்யூட்டரில் அதிக நேரம் வேலை செய்பவர்கள் இந்த பயிற்சிகளை கண்டிப்பாக செய்ய வேண்டியது அவசியம்.
Read More

Friday, February 12, 2016

// // Leave a Comment

தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்?

பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா?

கறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இங்கு தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.


கொழுப்புக்கள் கரையும்

காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.


இரத்த சோகை

இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.


சர்க்கரை நோய்

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.


இதய நோய்

கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.


செரிமானம்

நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.


முடி வளர்ச்சி

கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.


சளித் தேக்கம்

சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.


கல்லீரல் பாதிப்பு

நீங்கும் கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.


மனித உடலின் நண்பன் கறிவேப்பிலை.

தூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள்.

குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுத்து பழக்கப் படுத்துவது நம் தலையாய கடமைகளில் ஒன்று என்பதை மனதால் உணருங்கள்.
Read More

Monday, February 8, 2016

// // Leave a Comment

தினமும் காலையில் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

பழங்களில் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த பழங்களை காலை வேளையில் சாப்பிட்டு வருவதன் மூலம் இன்னும் பல நன்மைகளைப் பெறலாம் என்பது தெரியுமா?


ஆற்றலை அதிகரிக்கும்

பழங்கள் உடலுக்கு போதிய ஆற்றலை வழங்கும். அதிலும் ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம், பெர்ரிப் பழங்கள் மற்றும் தர்பூசணி போன்றவை மிகவும் சிறப்பான காலை உணவுகள். மேலும் இவைகளில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாகவும், கார்போஹைட்ரேட் அதிகமாகவும் இருப்பதால், காலை வேளையில் சாப்பிடுவதற்கு இப்பழங்கள் மிகவும் சிறந்தவை.


செரிமானத்திற்கு நல்லது

பழங்கள் மிகவும் சிறப்பான உடலை சுத்தப்படுத்தும் உணவுப் பொருள். அதிலும் அதனை காலையில் சாப்பிட்டால், உடலில் சேர்ந்த டாக்ஸின்கள் அனைத்தும் வெளியேறி, செரிமானம் மேம்பட்டு, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கான ஆற்றலும் கிடைக்கும்.


நொதிகள் நிறைந்தது

காலையில் பழங்களை சாப்பிட நிபுணர்கள் பரிந்துரைப்பதற்கு மற்றொரு காரணம், இவற்றில் நொதிகள் அதிகம் நிறைந்துள்ளது. நொதிகளானது உடலின் பல்வேறு இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாதவை. மேலும் நொதிகள் தான் சத்துக்கள் உடல் உறிஞ்சுவதற்கு உதவிபுரிகின்றன.


மனநிலையை மேம்படுத்தும்

காலை வேளையில் பழங்கள் எடுத்துக் கொள்வதன் மூலம், அதில் உள்ள இயற்கையான குளுக்கோஸ் மற்றும் நார்ச்சத்து, மன நிலையை மேம்படுத்தி, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க உதவும்.


மன அழுத்தத்தைக் குறைக்கும்

பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இதனால் மன அழுத்தத்தில் இருந்து விடுபட வழிவகுக்கும். எனவே காலையில் பழங்களை உட்கொண்டால், மன அழுத்தம் மட்டுமின்றி, உடலில் ஏற்பட்ட அழுத்தமும் நீங்கி, ரிலாக்ஸாக இருக்க உதவி புரியும்.


உடல் வறட்சியைத் தடுக்கும்

பழங்களில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், அவற்றை உட்கொள்வதன் மூலம் உடல் வறட்சியைத் த டுக்கலாம். அதிலும் காலையில் தண்ணீர் அதிகம் குடிக்க பிடிக்காதவர்கள், பழங்களை காலை வேளையில் அதிகம் சாப்பிடலாம்.


இனிப்பு பண்டங்களின் ஆர்வத்தைக் குறைக்கும்

பழங்களில் உள்ள இயற்கை சர்க்கரை, இனிப்புப் பொருட்களின் மீதுள்ள அதிகப்படியான ஆர்வத்தைக் குறைக்கும். அதிலும் காலையில் இதனை உட்கொண்டால், இனிப்புக் பொருட்களின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தாமல் தடுக்கும்.


எடையைக் குறைக்கும்

பழங்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கியமான நன்மைகளுள் ஒன்று எடை குறையும் என்பது தான். இதற்கு காரணம் அதில் உள்ள இயற்கை சர்க்கரை, குறைவான கலோரி போன்றவை மட்டுமின்றி, உடலின் ஆற்றலை நீண்ட நேரம் நிலைத்திருக்க உதவும்.
Read More