Monday, June 27, 2016

// // Leave a Comment

வாரம் ஒருமுறை இஞ்சி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

அனைவருக்குமே இஞ்சி சாற்றில் மருத்துவ குணங்கள் ஏராளமாக உள்ளது என்று தெரியும். இஞ்சி சமையலில் உணவின் சுவை மற்றும் மணத்தை அதிகரிக்க பயன்படுவது மட்டுமின்றி, சளி, இருமல், செரிமான பிரச்சனைகள், கர்ப்ப கால குமட்டல் போன்ற பல பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

இஞ்சியை சுத்தமாக நீரில் கழுவி, அதன் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து வடிகட்டி, பாதி எலுமிச்சை சாறு மற்று தேவையான அளவு தேன் கலந்தால், இஞ்சி ஜூஸ் தயார்.

இஞ்சியில் உள்ள ஆன்டி-டயாபடிக் தன்மை, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. எனவ சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஒரு டம்ளர் இஞ்சி ஜூஸைப் பருகி வந்தால், நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

இஞ்சி ஜூஸைக் குடித்து வந்தால், மூளையில் புரோட்டீன் அளவு அதிகரித்து, மூளையின் ஆரோக்கியம் மேம்படும். இப்படி புரோட்டீன் அளவு அதிகரித்தால், மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.

புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், இஞ்சியை ஜூஸ் செய்து குடித்து வாருங்கள். குறிப்பாக ஆண்கள் பருகினால், புரோஸ்டேட் புற்றுநோய் வராது.

இஞ்சி வயிற்றுப் பிரச்சனைகளான செரிமானமின்மை, பசியின்மை, வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல் போன்றவற்றில் இருந்து நிவாரணம் தருவதால், இஞ்சியைக் கொண்டு ஜூஸ் தயாரித்து அடிக்கடி பருகி வந்தால், இரைப்பைக் குடல் புற்றுநோய் வரும் அபாயம் குறைவதோடு, வராமலும் தடுக்கப்படும்.

இஞ்சி இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுவதோடு, உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவையும் குறைத்து, சீராக பராமரிக்க உதவும். இதனால் இதய ஆரோக்கியமும் மேம்படும்.
Read More

Tuesday, June 21, 2016

// // Leave a Comment

இயற்கை பழச்சாறுகளின் மகத்துவம்

தர்பூசணிப்பழச்சாறு

கோடையின் கொடுமையிலிருந்து விடுபட நினைப்பவர்கள் இப்பழத்தை உண்பது இயல்பு. ஆனால் சாறு எடுத்து உண்ணும் போது கல்லடைப்பு என்னும் நோயுடன் சிறுநீர் வெளியேறும் போது தோன்றும் பல்வேறு குறைபாடுகளும் நீங்கும்.
நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர காய்ச்சல் குணமாகும். சாறுடன் சமஅளவு மோர் கலந்து அருந்த காமாலை குணமாகும்.


அத்திப்பழச்சாறு

அத்திப்பழத்தை பிட்டுப்பார்த்தால் அத்தனையும் சொத்தை என்று பழமொழி இருந்தாலும் கூட அத்திப்பழத்தை உபயோகிக்கலாம். அத்திப்பழத்தை சேகரித்து சாறு பிழிந்து சுவைக்காக தேங்காய் பாலும் தேனும் கலந்து அருந்தலாம். இச்சாறு எலும்பு முறிவு உள்ளவர்களுக்கு மிக்க பலனை தரும்.
அத்திப்பழமும் தேனும் கலந்து கல்உப்புடன் சேர்த்து உண்ண ஆரம்பகாலச் சிதைவுகளை சரி செய்யலாம். ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைவு ஆகியவை இச்சாறு அருந்துவதால் குணமாகும்.


ஆப்பிள் பழச்சாறு

ஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல், உடல்களைப்பு, வேளையில் ஆர்வமின்மை போன்றவற்றை குணமாக்கும் தன்மையுள்ளது. ஆப்பிள் பழச்சாறுடன் தேனும் பொடித்த ரோஜா இதழ், ஏலம் ஆகியவற்றை கலந்து அருந்த ரத்த சோகை குணமாகும். மேலும் கர்ப்பிணி பெண்கள் இச்சாற்றை அருந்த பிரசவத்தின் போது இழக்கும் சக்தியை பெறலாம். குழந்தைகளுக்கு ஆப்பிள் சாறு கொடுக்க உடல் வளர்ச்சி, உடற்பலம் பெருகும்.


திராட்சைச் சாறு

திராட்சைச் சாறு தொடர்ந்து அருந்தி வர இரத்த அழுத்தகுறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண் (அல்சர்), காமாலை, வாயுகோளாறுகள், மூட்டுவலி ஆகியவை குணமாகும். திராட்சைச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்த விருக்தியுண்டாகி உடல்பலம் மிகும். நீரிழிவு வியாதிக்கு சர்க்கரை சேர்க்காத சாறு மிகவும் நல்லது.


ஆரஞ்சுச் சாறு

தொண்டையில் புற்றுநோய் கொண்டு எந்த உணவும் உட்கொள்ள இயலாத நிலையிலுள்ளவர்களுக்கு ஆரஞ்சுச்சாறு அருமருந்தாகும். திட உணவு உட்கொள்ளாத வகையில் உள்ளவர்கள் இச்சாற்றை துளி துளியாக அருந்தி உடல் நலம் பெறலாம். இச்சாற்றை அருந்துபவர்களுக்கு உடலில் நோயினை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது. எளிதில் ஜீரணம் செய்ய தகுந்தது. இருதய நோய்கள் எளிதில் குணமாகும். டைபாய்டு, ஜுரம் ஆகியவை குணமாகும். ஆரஞ்சுச் சாறுடன் இளநீர் கலந்து அருந்துவதால் சிறுநீர் தாராளமாக வெளியேறும்.

சிறுநீரக குறைபாடு குணமாகும். குழந்தைகளுக்கு கொடுக்க குடல் பலம் பெருகும். இச்சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்தும் அருந்தலாம்.


எலுமிச்சைச் சாறு

பாத்திரங்களில் உள்ள அழுக்கை நீக்க மட்டும் எலுமிச்சை பயன்படுவதில்லை. நமது உடலில் உள்ள அழுக்குகளை அகற்றவும் பயன்படுகிறது. எலுமிச்சைச் சாறு அத்துடன் தேன் கலந்து அல்லது வெல்லம் கலந்து ஒரு பழத்திற்கு அரை லிட்டர் தண்ணீர் கலந்து அருந்த வேண்டும்.

தொடர்ந்து அருந்துவதால் மூல நோய்கள், வயிற்றுக்கடுப்பு, பித்தத்தால் வரும் நோய்கள் ஆகியவை குணமாகும். ஆனால் அளவுக்கதிகமாக இதை அருந்தும்போது குடல் தன் பலத்தை இழக்க நேரிடும்.

இளநீருடன் கலந்து அருந்துவதால் டைபாய்டு நோய் குணமாகும். வெள்ளை வெங்காய சாறுடன் கலந்து அருந்துவதால் மலேரியா நோய் குணமாகும். வெள்ளை வெங்காயத்துடன் கற்பூரம் கலந்து அருந்த எலுமிச்சைச் சாறுடன் அருந்துவதால் காலரா குணமாகும்.
உடல் களைப்புகள், கை, கால் கனுக்களில் வீக்கம் வலி ஆகியவை இருந்தால் எலுமிச்சைச்சாறுடன் விளக்கெண்ணெய் கலந்து தேய்த்து வர வலியிலிருந்து மீளலாம்.

பழுத்த வாழைப்பழத்துடன் எலுமிச்சைச் சாறும் தேனும் கலுந்து குழைத்து உண்ண மலக்குடலில் உள்ள குறைகள் நீங்கி பல நோய்கள் வராது தடுக்கலாம்.


தக்காளிச் சாறு

தக்காளிச் சாற்றை நாள்தோறும் காலைவேளையில் உண்டுவர உடல் வலிமை அதிகமாவதுடன் வேண்டாத சதைகளும் குறையும். நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்தம் சுத்தமாகும். தோல் நோய்கள் குணமாகும். மேலும் தக்காளி ஏழைகளின் ஆப்பிள் என்ற அழைப்படுவதற்கு ஏற்ப பல விதமான நோய்களை குணமாக்கும் ஆப்பிளில் இருக்கும் சத்தைவிட சற்று அதிகான சத்துடன் விலை மலிவாக கிடைக்கும்


கிவி பழம்

இது ஒரு சிறிய ஆனால் வலிமை மிகுந்த பழம். இப்பழம் பொட்டாசியம், மக்னீஷியம், விட்டமின்- ஈ. மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த ஓர் நல்ல பழம். ஆரஞ்சுப் பழத்தை விட விட்டமின்-சி சத்து கிவி பழத்தில் இரண்டு மடங்கு அதிகம் உள்ளது.


ஸ்ட்ராபெர்ரி

பாதுகாப்பு தரும் பழம். இந்தப் பழத்தில் மற்ற எல்லாப் பழங்களையும் விட. மொத்த Antioxidant சக்தி இருப்பதால்,இது நம் உடலில் சுதந்திரமாய் கட்டுப்பாடற்று பல்கிப் பெருகும் அடிப்படைக் கூறுகளால் [ free radicals ]  இரத்த நாளங்களில் அடைப்பு, புற்று நோய்க் காரணிகள் பெருகுதல் முதலியவை ஏற்படாமல்  நம்மைப் பாதுகாக்கிறது.


கொய்யா & பப்பாளி

இவை இரண்டுமே விட்டமின் – சி நிறைந்தது. உயர் விட்டமின்-சி கொண்ட பழங்களைத்  தேர்வு செய்தால் சந்தேகத்துக்கிடமின்றி வெற்றி பெறும் தகுதியுடையவை. கொய்யாப்பழம் நார்ச்சத்து அபரிமிதமாக உள்ளதால், மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. பப்பாளிப்பழம் [ Carotene ] சத்துக்கள் நிறைந்தது. எனவே கண்களுக்கு மிகவும் நல்லது.
Read More

Wednesday, June 1, 2016

// // Leave a Comment

மேனியின் அழகை மெருகூட்டும் ஆயுர்வேத அழகு குறிப்புகள்

சருமத்தை அழகாக்குவதில் இயற்கையானவைப் போல பாதுகாப்பானது எதுவுமில்லை. செலவும் குறைவு, கெமிக்கலும் இல்லை. ஆயுர்வேதத்தில் நிறைய பொருட்கள் உங்கள் சருமத்தின் நிறத்தினை அதிகரிக்கச் செய்து, மேனிக்கு மினுமினுப்பு அளிக்கிறது.

அதனால்தான் வெளி நாட்டவரும் இப்போது ஆயுர்வேதம், போன்ற நம் நாட்டு இயற்கை முறைகளின் பக்கம் வருகின்றனர்.

சிலருக்கு என்ன செய்தாலும் சருமம் பொலிவின்றி காணப்படும். க்ரீம்கள் எல்லாம் அப்போதைக்கு தீர்வு அளிப்பது போல இருந்தாலும், நிரந்தரமான அழகினை தருவதில்லை என உங்களுக்கு தோன்றுகிறதா? அப்படியெனில் இந்த குறிப்பு நிச்சயம் உங்கள் சாய்ஸில் இடம் பெறும். என்ன வழிகளில் உங்கள் அழகினை மெருகூடலாம் என பார்க்கலாம்.


சாமந்தி பூ ஃபேஸ் பேக்

சாமந்தி பூவின் இதழ்களைப் பிரித்தெடுத்து அவற்றை பாலுடன் சேர்த்து நன்றாக மைய அரைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் தேனினை சேர்த்து, நனறாக கலந்து முகத்தில் மாஸ்க் போல போடுங்கள். 15 நிமிடங்கள் கழித்து காய்ந்ததும் கழுவி விடுங்கள்.
வாரம் இரு முறை இந்த மாஸ்க் போட்டு வந்தால், சருமம் இறுக்கமடையும். முகப்பருக்கள் மறைந்து விடும். சருமம் மினுமினுக்கும்.


மஞ்சள்-கடலை மாவு ஃபேஸ் பேக்

இது மிகவும் எளிதாக வீட்டில் இருக்கக் கூடியவை. திருமண சமயங்களில் உடனடியாக கருமை போய், நிறம் அதைகரிக்க வேண்டுமென்றால், இந்த ஃபேஸ் பேக்கை உபயோகிங்கள். சருமமும் பளபளப்பாகும். 4 ஸ்பூன் க்டலை மாவில், அரை ஸ்பூன் மஞ்சள் சேர்த்து, சிறிது பால் கலந்து குழைத்துக் கொள்ளுங்கள். இதனை முகத்தில் போட்டு, 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். உடனடியாக கருமை நீங்கி சருமம் ஜொலிப்பதை நீங்கள் உணர்வீர்கள்.

குறிப்பு 
இந்த பேக்கை அதிக நேரம் போட்டு காய விடக்கூடாது. சருமத்தில் நுண்ணிய சுருக்கங்கள் வர காரணமாகிவிடும்.


அரோமா ஃபேஸ்பேக்

இந்த அரோமா பேக் சருமத்தில் அருமையான பலன்களை தரும். சருமத்தில் உள்ள அழுக்குகள் வெளியேற்றி, போஷாக்கினை அளிக்கிறது. அதில் சேர்த்துள்ள மூலிகைகள் சருமத்திற்கு ஜொலிப்பினை தருகின்றன.

தேவையானவை

அரைத்த சந்தனம் - 1,
ஸ்பூன் ரோஜா எண்ணெய் - 2 துளிகள்,
லாவெண்டர் எண்ணெய் -1,
துளி கடலை மாவு-2 ஸ்பூன்,
மஞ்சள் - ஒரு சிட்டிகை

மேலே கூறிய அனைத்தையும் சிறிது மோர் கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள். 10-15 நிமிடங்கள் அப்படியே விடவும். வாரம் இரு முறை செய்தால், உங்களுக்கு இளமையான சருமம் கிடைக்கும்


ஆயுர்வேத ஸ்க்ரப்

அரிசிமாவு 1 ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். அதே அளவு சந்தந் பொடியையும் அதில் சேர்க்கவும். இப்போது, சிறிது சங்கு பொடி(விருப்பமிருந்தால்) சேர்த்து, அதனுடன், அரை ஸ்பூன் பால், கடலை மாவு , மற்றும் 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக கலக்கவும். இதனை முகத்தில் போட்டு தேய்த்து கழுவுங்கள். இதனை வாரம் ஒரு முறை செய்யலாம். அழுக்குகளை அறவே நீக்கி, உங்கள் சருமத்தை பளிச்சிட வைக்கும்.
Read More