Friday, September 26, 2014

// // Leave a Comment

கால் ஆணி


பித்தவெடிப்பிற்கு அடுத்தபடியாக பாதங்களைத் தாக்குவதில் இடம் வகிப்பது கால் ஆணி எனலாம். இது பாதத்தைத் தரையில் வைக்க முடியாத அளவிற்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.

பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல உண்டாகி நடக்கும் போது வலியைத் தருவதுதான் கால் ஆணி ஆகும். இது அதிகமான உடல் அழுத்தம் காரணமாகவும், அளவு குறைந்த காலணிகளை அணிவதாலும் முள் போன்ற அன்னியப் பொருட்கள் கால்களில் குத்தி தங்கிவிடுவதாலும் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தைத் தருகிறது.

கால் ஆணி உள்ளவர்களின் காலணிகளை பயன்படுதுவதாலும் கால் ஆணி ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. காலுக்குப் பொருந்தாத சிறிய அளவு செருப்புகளைப் பயன்படுத்துவதாலும், வெறும் காலில் நடப்பதாலும் கூட கால் ஆணி ஏற்படும்.

இந்தக் கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் பின்னாளில் நடப்பதற்கே பெரும் சிரமமாகிவிடும்.


கால் ஆணிக்கு இயற்கை மருத்துவத்தின் மூலம் சிகிச்சை அளிக்கலாம்.

(1) வெள்ளை எருக்கின் இலைகளை அரைத்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் பத்து போடலாம்.

(2) கால் ஆணி ஏற்பட்ட ஆரம்ப நிலையிலேயே பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரலாம்.

(3) அம்மான் பச்சரிசி செடியின் பாலை எடுத்து, கால் ஆணி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் வெகு விரைவில் குணமாகும்.

(4) சிறிதளவு மருதாணி இலை மற்றும் மஞ்சள் துண்டு இரண்டையும் மையாக அரைத்து, ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து, இரவு தூங்குவதிற்கு முன் கால் ஆணி உள்ள இடத்தில் வைத்து கட்டிவிட வேண்டும். தொடர்ந்து 10 நாள் செய்தால் குணமாகிவிடும்.

(5) இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டு காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணி நிவாரணம் கிடைக்கும்.

(6) மேலும், மல்லிகைச் செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பற்று போடலாம். பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாமலும், இருந்த இடம் தெரியாமலும் போகும்.

(7) மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள் மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும்.

0 comments:

Post a Comment